கோயில் நிதி கோயில்களுக்கு மட்டுமே.. அறநிலையத்துறையில் அடிப்படை கட்டமைப்பு மாற்றம்.. ஆளுநர் உரை
சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் அடிப்படை கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் சொத்துகள் அதன் நலன்களுக்காக மட்டும் பயன்படுத்துவது உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அரசு நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர்வது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரையுடன் இன்று தொடங்கியது. இந்த உரையில், தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் மிக விரைவில் மிகப்பெரிய அளவிலான அடிப்படை கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும், அந்தந்த கோயில்களின் நற்பணிகளுக்கும் மற்றும் ஆன்மீக நலன்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவது முற்றிலும் உறுதி செய்யப்படும். கோயில் சொத்துக்கள் மற்ற பிற காரியங்களுக்குத் திசைதிருப்பப்படுவது தடுக்கப்படும்.
இந்து சமய அறநிலையத்துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்களை இந்த அரசு மேற்கொள்ளும். கோயில்களின் அசையும், அசையா சொத்துகள் அனைத்தும் அதன் புனிதமான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுவது இந்த அரசால் உறுதிப்படுத்தப்படும் இதனால் கோயில் சொத்துக்கள் முழுமையாக ஆன்மீக மற்றும் பக்தர்களின் தேவைகளுக்காக மட்டுமே செலவிட புதிய கட்டமைப்பு வழிவகை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் முந்தைய அரசின் தொழில் கொள்கையை தொடர்வதுடன் புதிய தொழில் கொள்கையை தவெக அரசு வெளியிட உள்ளது. முதலீடுகளை ஈர்க்க தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமையை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உலகத் தரத்திலான பயிற்சிகளை அளிக்க ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும். முல்லைப்பெரியாறு நீர் வரத்தை தடுக்கும் வகையில்கேரள அரசு
புதிய அணை கட்ட எதிர்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications