'உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி மு.க.ஸ்டாலின்'.. ராகுல் காந்தி தமிழில் ட்வீட்.!
சென்னை: நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக ராகுல் காந்தி குரல் கொடுத்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்த நிலையில் 'உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஸ்டாலின்' என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பேசிய ராகுல் காந்தி மத்திய அரசை வறுத்தெடுத்தார்.''மாநிலங்களின் குரலை மத்திய அரசு ஒடுக்க நினைக்கிறது. இது ஒருபோதும் நடக்காது என்று கூறினார்.

ராகுல் காந்தியின் அனல் பறக்கும் பேச்சு
தமிழகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல் காந்தி, ''நீட் தேர்வு விலக்கு வேண்டும் என தமிழகம் உங்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. தமிழகத்தின் கோரிக்கைகள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை. தமிழகம் மீண்டும் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கும். நீங்கள் மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள்'' என்று குற்றம் சாட்டினார்.

தேசிய அளவில் டிரெண்ட்
உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஒரு போதும் நீங்கள் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது'' என்றும் ராகுல் காந்தி அனல் பறக்க பேசினார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுதான் இப்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக உள்ளது. ராகுல் காந்திக்கு ஆதரவாக தேசிய அளவில் டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி உள்ளது. பல்வேறு தரப்பினரும் ராகுல் காந்தியை பாராட்டி வருகின்றனர்

மு.க.ஸ்டாலின் நன்றி
இதேபோல் நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக ராகுல் காந்தி குரல் கொடுத்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் புரட்சிகரமான பேச்சுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பின் கருத்தை அழுத்தமான முறையில் வெளிப்படுத்திய புரட்சிகரமான பேச்சுக்கு நன்றி. சுயமரியாதை மதிக்கும் தமிழர்களின் நீண்டகால வாதங்களுக்கு நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீரகள்'' என்று கூறி இருந்தார்.

ராகுல் காந்தி பதிலுக்கு நன்றி
இந்த ட்வீட்டுக்காக தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி மு.க.ஸ்டாலின்' என்று தமிழில் கூறியுள்ளார். மேலும், தமிழர்கள் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மாநில மக்களும் எனது சகோதர, சகோதரிகள்தான். இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி மீதான நமது நம்பிக்கை வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications