இணைந்த கைகள்.. பாரிவேந்தருக்கு போனைப் போட்ட ராமதாஸ்! 8 ஆண்டு கால பஞ்சாயத்து ஓவர்! அடுத்தது இதுதானா?
சென்னை: தற்போது தமிழக பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக ஐஜேகே இடையே நீண்ட காலமாகவே அறிக்கை போர், நீதிமன்ற வழக்கு என பல பிரச்சனைகள் இருந்த நிலையில் தற்போது சமாதானம் ஆகி இருப்பதாக சொல்கின்றனர் நிர்வாகிகள். இருவருக்குள்ளும் என்ன பிரச்சனை? எங்கு தொடங்கியது? எப்படி முடிவடைந்தது? என்பது குறித்து பார்க்கலாம்..
தமிழகத்தில் தற்போது இருக்கும் தீவிர தேர்தல் அரசியல் தலைவர்களில் மூத்தவர் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரான ராமதாசை சொல்லலாம். மருத்துவராக இருந்த அவர் வன்னியர் சங்கத்தை தொடங்கி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியாக அதனை உருவாக்கினார்.

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில் கூட்டணி அமைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றவர். அவரது கட்சியில் இருந்து மத்திய அமைச்சர்களாகவும் பலர் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
ஆனால் இதுவரை ராமதாஸ் எந்த அரசு பதவியையும் வகித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மற்ற அரசியல் தலைவர்களில் இருந்து ராமதாஸ் எப்போதும் தனித்தே தெரிவார். காரணம் அவரது அறிக்கைகள். சுற்றுச்சூழல், பொருளாதாரம், மக்கள் பிரச்சனை என பல்வேறு தளங்களில் அவரது அறிக்கைகள் அனைத்து அரசியல்வாதிகளும் உன்னிப்பாக கவனிக்கத்தக்க வகையில் இருக்கும். குறிப்பாக அவரது அறிக்கைகள் மிகவும் துல்லியமாகவும் தரவுகளோடும் இருக்கும்.
மேகதாது பிரச்சனை தொடங்கி ரேஷன் கடை பிரச்சினை வரை அவரது அறிக்கை எப்போதும் ஆளும் கட்சிக்கு ஒரு உந்துகோலாகவே இருக்கும். அதே நேரத்தில் கடும் விமர்சனங்களை எதிர் அணிக்கு வைக்க எப்போதும் பாட்டாளி மக்கள் கட்சி தயங்கியது கிடையாது. புகைப்பிடித்தல் பிரச்சனை தொடங்கி திரைப்படங்கள் தொழில் நிறுவனங்களுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டும் என பிரச்சனை செய்து பல முன்னணி ஹீரோக்களுடன் வம்பு இழுத்ததும் பாட்டாளி மக்கள் கட்சி தான்.
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி விஜய் வரை பலருக்கும் பாமக குடைச்சலை கொடுத்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க தமிழகத்தின் மிகப் பிரபலமான கல்வி மற்றும் தொழில் நிறுவனமாக எஸ்ஆர்எம் குழுமம் இருக்கிறது. இதன் நிறுவனரான பாரிவேந்தர் பச்சமுத்து திமுக கூட்டணியில் இணைந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது, எஸ்ஆர்எம் டிராவல்ஸ், தொலைக்காட்சி நிறுவனங்கள் எஸ்ஆர்எம் மருத்துவமனை, எஸ்ஆர்எம் ஹோட்டல் குழுமம் என பல தொழில்களில் கால் பதித்து வெற்றிகரமான தொழிலதிபராக இருக்கிறார் பச்சமுத்து. தொடர்ந்து அவர் அரசியல்வாதி அவதாரம் எடுத்து இந்திய ஜனநாயக கட்சியை உருவாக்கினார். தற்போது அந்த கட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லை என்றாலும் ஆண்டுக்கு ஆண்டு மாநாடு அறிக்கைகள் என அவரும் ஒரு பிஸியான அரசியல்வாதியாகவே தன்னை காட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக சென்று கொண்ட சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாமகவுக்கும் ஐஜேகேவுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது. ஆதாவது கடந்த 2016ஆம் ஆண்டு வேந்தர் மூவிஸ் மதன் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, எஸ்ஆர்எம் கல்வி குழும தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதிலிருந்து இரு தரப்புக்கும் இடையே கருத்து மோதல் வெடித்தது.
தொடர்ந்து அறிக்கைகளிலும் பேட்டிகளிலும் மாறி மாறி தாக்கி கொண்ட அதன் தலைவர்கள் நீதிமன்றம் வரை சென்றனர். உண்மையான பிரச்சினை மறந்து தனிப்பட்ட முறையில் தாக்கிக் கொள்ளும் நிலையும் வந்தது. இதனால் இது தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் ஒரு கட்சி இருக்கும் கூட்டணியில் இன்னொரு கட்சி இணையாமல் எதிர் தரப்பில் தஞ்சம் புகுந்து வந்தது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விலகிய ஐஜேகேவும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமகவும் பாஜக கூட்டணியில் இணைந்தன. அப்போதிருந்து இரு தரப்புக்கும் இடையேயான மனக்கசப்புகள் மறைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஐஜேகேவுக்காக பாட்டாளி மக்கள் கட்சியினரும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் ஐஜேகே நிர்வாகிகளும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
விக்கிரவாண்டி தேர்தலில் ரவி பச்சமுத்து பாமக வேட்பாளருக்காக பிரச்சாரம் மேற்கொண்ட இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் பச்சமுத்துவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ராமதாஸ் அவரை தொடர்பு கொண்டு பேசினார். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இந்த பேச்சு இருந்ததாக கூறப்படுகிறது. வழக்கமான நலம் விசாரிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு தனிப்பட்ட ரீதியிலும் இருவரும் உரையாடியதாக கூறப்படுகிறது. இதனால் இது தரப்பினருக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி இருவரும் சகஜமாக பழகி வருவதாக கூறுகின்றனர். மேலும் இந்த பேச்சு சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறுகின்றனர் பாமகவினரும் ஐஜேகே நிர்வாகிகளும்..
-
லட்சிய ஜனநாயக கட்சிக்கு தர்பூசணி சின்னம்.. NDA கூட்டணியில் இடம்பெறுமா? இல்லையா? -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
தமிழகம் + புதுச்சேரி.. 10 தொகுதிகள் ஒதுக்குங்க.. ஸ்டாலினை வீட்டில் சந்தித்து திருமாவளவன் கோரிக்கை! -
பெரம்பூரில் விஜய் போட்டியிட விரும்புவதன் பின்னணி? திமுகவை அசரடிக்கும் செல்வாக்கு உள்ளதா? -
ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. காங்கிரஸ் பாணியில் விசிகவின் வியூகம் கைகொடுக்குமா -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல்












Click it and Unblock the Notifications