Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடரும் அதிரடி.. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்! சற்று முன் தலைமைச் செயலர் வெளியிட்ட அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகராட்சி நிர்வாக இணை ஆணையராகவும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டிஆர்ஓ துர்கா மூர்த்தி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

நிர்வாக காரணங்களுக்காக தமிழகத்தில் அரசு துறை உயர் அதிகாரிகள் அவ்வப்போது இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

Tamil Nadu Government IAS Chief Secretary

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை செயலராக இருந்த அமுதா சென்னை மாநகர ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் பல ஐஏஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி, வணிக வரித்துறை இணை ஆணையராகவும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் இணை ஆணையராகவும், தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, அருங்காட்சியகங்களின் இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Nadu Government IAS Chief Secretary

இதேபோல், POWERFIN நிறுவன நிர்வாக இயக்குநர் அம்பலவானன், தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகவும், நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி, கருவூலத்துறை ஆணையராகவும், திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சுஹபுத்ரா நெல்லை மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், ஓசூர் மாநகராட்சி ஆணையராகவும், அரசு துணை செயலாளர் அனு, கடலூர் மாநகராட்சி ஆணையராகவும், நாகை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராகவும், சென்னை விருந்தினர் மாளிகை பொறுப்பு அதிகாரி கந்தசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையராகவும், குடிமைப் பொருள் விநியோக கழக பொது மேலாளர் சதீஷ், ஈரோடு கூடுதல் ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Nadu Government IAS Chief Secretary

கைத்தறித்துறை ஆணையர் விவேகானந்தன், நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராகவும், பொதுத்துறை கூடுதல் செயலாளர் சிவஞானம், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாகவும், நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனிஷ் சாப்ரா, திருப்பூர் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராகவும், தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அமிர்த ஜோதி, கைவினைப்பொருட்கள் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+