கிளாம்பாக்கத்தில் நடந்த.. சூப்பர் மாற்றம்! இனி பஸ் ஏறப்போகும் மக்களுக்கு சர்ப்ரைஸ்! அசத்தல் முடிவு
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ₹15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் சேகர் பாபு தகவல் வெளியிட்டு உள்ளார்.
அங்கே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ₹15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்கா செயற்கை நீர் வீழ்ச்சி, அலங்கார விளக்குகள், பூங்கா , நடைபாதை, சிறுவர்கள் விளையாடும் இடம் என்று அசத்தலான வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன.

இது போக கிளாம்பாக்கம் ரயில்வே நிலையத்தை பேருந்து நிலையத்தோடு இணைக்கும் நடைபாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்த நடைபாலம் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தை சென்னைவாசிகள் எளிதாக அணுகும் வகையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் இதன் பணிகள் நிறைவடையும் வாய்ப்பு உள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே கட்டிவருகிறது. தமிழக அரசின் நிதியுதவியின் அடிப்படையில், தெற்கு ரயில்வே கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் திட்டத்தை வகுத்தது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மூலம், மாநில அரசு, 20 கோடி ரூபாயை இந்த ஹால்ட் ஸ்டேஷன் கட்டுவதற்கு வழங்கியது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பாலம்: மேலும், சாலையின் எதிர்புறத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தை பேருந்து நிலையத்துடன் இணைக்க, சிஎம்டிஏ சார்பாக ₹79 கோடி செலவில் ஸ்கைவாக் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே வெளியிட்ட தகவலில், நிலம் கையகப்படுத்தியதில் நிலவிய சிக்கல் காரணமாக, ரயில் நிலைய கட்டுமானப் பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், சில மாதங்களுக்கு முன் அது சரி செய்யப்பட்டது. ரயில் நிலையத்திற்கு சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பிளாட்பாரங்களில் மண் நிரப்பும் பணி துவங்கியுள்ளது.
பாலம் எப்படி இருக்கும்?: இந்த பாலம் சாதாரண நடைபாலமாக இருக்காது. மாறாக இது ராஜபாதையாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது
இந்த பாலத்தில் சிறிய சிறிய கியோஸ்க் வகை கடைகள் இருக்கும். மக்கள் அமர சீட்டிங் பே போன்ற இருக்காய் வசதிகள் இருக்கும். டிஜிட்டல் ஸ்கிரீனில் பேருந்துகள் செல்லும் பகுதிகள், நேரம், பிளாட்பார்ம் இருக்கும். அதேபோல் ரயில் மற்றும் பேருந்துகளுக்கான டிக்கெட், முன்பதிவு கவுண்டர்கள் கூட இருக்கும்.
முடிச்சூர்: இதனுடன் சேர்ந்து முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் பேருந்து நிலையத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார். ஆம்னி பேருந்து நிலையம் தீபாவளிக்குப் பின் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி முடிச்சூரில் கட்டி முடிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் தீபாவளி முடிந்த பிறகு திறக்கப்படும் என்று ஆம்னி பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்ட பின்னர் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் தெரிவித்து உள்ளனர்.
கிளாம்பாக்கத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் முடிச்சூர் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்த நிலையில் கடைசி கட்ட சீரமைப்புகள் நடக்கின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications