இதுவரை SIR ல் கண்ட கேட்ட குழப்பங்கள்: நெட்டிசன் வெளியிட்ட முக்கியமான பதிவு
சென்னை: அப்பா அம்மா தாத்தா பாட்டி இவர்களில் ஒருவரை யாரெனும் ஒரு வழித்தோன்றல் (மகன் மகள்) தன் படிவத்தில் பயன்படுத்திவிட்டால் இன்னொருவரால் பயன்படுத்த முடியவில்லை. எடுத்துக்காட்டுக்கு என் அப்பா பெயர் 2005ல் பட்டியலில் உள்ளது. நான் இணையவழிப் படிவம் போடும்போது அவரின் தகவலைப் பயன்படுத்தினேன். அது ஆதார் சரிபார்ப்பில் மறுக்கப்பட்டுவிட்டது என்று நெட்டிசன் ஒருவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) பதிவிட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாக சென்று 27.10.2025 அன்றைய தேதியிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய அச்சிடப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தின் 2 நகல்களை ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வழங்கி வருகிறார்கள்.

இந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள வாக்காளர் விவரங்கள் மற்றும் முந்தைய சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் மற்றும் வாக்காளரின் உறவினர் விவரங்களை நிரப்ப வேண்டும்.
இந்த பணி வருகிற டிசம்பர் 4-ந் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த படிவம் தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது. ஒரே மாதத்தில் முடிப்பது சாத்தியம் இல்லை என்கிற நிலை உள்ளது. பலர் வெளியூரில் வேலை செய்யும் நிலையில், அவர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் சேர முடியாத நிலை ஏற்படும்.. அல்லது ஏற்கனவே உள்ள பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் உள்ளது. இதுபற்றி பாலாஜி மூர்த்தி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட தகவல்களை பார்ப்போம். இதுவரை SIRல் கண்ட கேட்ட குழப்பங்கள்:
1. ஆதாரில் இருக்கும் பெயரும், வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும் பெயரும் ஒன்றாக இருந்தால் மட்டுமே இணையத்தில் படிவம் நிரப்பமுடியும். தமிழ்நாட்டு மக்களுக்குப் பெரும்பான்மையாக surname இல்லாததால் இது "-" எனத் தானாக எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்துப் போவதே இல்லை. இதனால் இணையவழிப் படிவம் கொடுப்பது மிகக் குழப்பமாக இருக்கிறது. Aadhaar authentication நீக்கினால் மட்டுமே இது பயன்படும்
2. அப்பா அம்மா தாத்தா பாட்டி ஏன் நம் பெயரும் கூட 2002, 2005ல் இருக்கும் பட்டியலில் தேடி எடுப்பது எளிதாக இல்லை. பலருக்கும் அப்போதைய அட்டை எண்ணும், இப்போதைய அட்டை எண்ணும் ஒத்துப் போகவில்லை, இல்லையெனில் அப்போதைய பட்டியலில் அந்த எண்ணே இல்லை.
3. அப்பா அம்மா தாத்தா பாட்டி இவர்களில் ஒருவரை யாரெனும் ஒரு வழித்தோன்றல் (மகன் மகள்) தன் படிவத்தில் பயன்படுத்திவிட்டால் இன்னொருவரால் பயன்படுத்த முடியவில்லை. எடுத்துக்காட்டுக்கு என் அப்பா பெயர் 2005ல் பட்டியலில் உள்ளது. நான் இணையவழிப் படிவம் போடும்போது அவரின் தகவலைப் பயன்படுத்தினேன். அது ஆதார் சரிபார்ப்பில் மறுக்கப்பட்டுவிட்டது.
சரி இன்னொரு முறை முயலலாம் எனப் பார்த்தால், "Selected Previous SIR Record is already map to someother elector,Please contact your BLO". எனில் ஒரு வீட்டில் நான்கு பெண்கள் இருந்தால், ஒருவர் அம்மா, ஒருவர் அப்பா தகவலைப் பயன்படுத்தலாம். மற்ற இருவர் தாத்தா பாட்டி பெயர்கள் இருந்தால்தான் பயன்படுத்தலாம். இல்லையென்றால் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும்
4. ஆணையம் கொடுத்திருக்கும் உதவி எண்களைத் தொடர்புகொண்டால் தானியங்கி உதவி மட்டுமே சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறது
5. வாட்ஸாப் எண்ணைத் தொடர்பு கொண்டால், விடை இல்லை

6. Request a Call with BLO எனும் முறையில் நேற்று பதிந்தேன். இன்னும் சில நிமிடங்களில் கூப்பிடுவார் என்று வந்தது. இப்போது வரை கூப்பிடவேயில்லை. அவரும் என்னதான் செய்வார் பாவம்" இவ்வாறு கூறியிருந்தார்.
இந்நிலையில் பாலாஜி மூர்த்தி தனது அடுத்த பதிவில், "அப்பா அம்மா தாத்தா பாட்டியின் பெயர், 2002, 2005 வாக்காளர்ப் பட்டியலில் இருந்தால், அதை ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடிகிறது, இன்னொருவர் பயன்படுத்தினால் தடுக்கிறது எனச் சொல்லியிருந்தேன். தேர்தல் ஆணையத்தின் காதுக்கு அது சென்றுவிட்டது போலும். இப்போது ஒன்றுக்கு மேற்பட்டவர் பயன்படுத்த இயல்கிறது. தட்டுங்கள் திறக்கப்படும். வலுவாக." இவ்வாறு கூறியுள்ளார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications