தமிழக விவசாயிகளே மிஸ் பண்ணாதீங்க.. சம்பா பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்!
சென்னை: சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலஅவகாச நீட்டிப்பு என்பது நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் விவசாயிகள் நாளைக்குள் சம்பா பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.
விவசாயிகள் பருவமழை மற்றும் அதிகமான வெயில் உள்ளிட்ட காலநிலை மாற்றங்களால் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நஷ்டத்துக்கு பரிகாரம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதாவது மத்திய அரசு சார்பில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பயிர் காப்பீடு என்பது மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி வரை விவசாயிகளுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி இந்த காலஅவகாசம் முடியும் கடைசி நாளில் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டது. அதாவது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருப்பது, தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையை எதிர்கொண்டனர்.
இதையடுத்து பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக வேளாண் ஆணையம் எல்.சுப்பிரமணியன் சார்பில் மத்திய வேளாண் துறைக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இதனை ஏற்று மத்திய அரசு காப்பீட்டுக்கான தேதியை நீட்டிப்பு செய்தது.
அதன்படி மத்திய வேளாண் அமைச்சகம் பயிர் காப்பீட்டுக்கான காலஅவகாசத்தை வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து கூடுதல் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. இந்த தேதி நீட்டிப்பால் பல விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்தனர்.
இந்நிலையில் தான் நீட்டிக்கப்பட்ட காலஅவகாசம் நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் விவசாயிகள் அவசரமாக அருகே உள்ள இணைய சேவை மையங்கள் சென்று நாளைக்கும் சம்பா பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications