Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரியாணி ஓட்டல்களில் நடந்த ஊழல்.. ஐடி ரெய்டில் வெளியான உண்மை! இத்தனை கோடிகளா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என தனி மவுசு இருக்கிறது. எனவே பிரியாணிக்கு என தனியான ஓட்டல்கள் இருக்கின்றன. இந்த ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில், கோடிக்கணக்கான பணம் வருமானத்திலிருந்து மறைக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஹைதராபாத்தில் உள்ள பிரியாணிக் கடைகளில் நடந்த தீவிர விசாரணை, இந்திய உணவு துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பெரிய வரி ஏய்ப்பு மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான உணவகங்களால் பயன்படுத்தப்படும் ஒரு பில்லிங் மென்பொருளின் 60 டெராபைட் பரிவர்த்தனைத் தரவுகளை ஆய்வு செய்தபோது இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

The Great Biriyani Scam

இந்த உணவகங்கள் 2019-20 நிதியாண்டு முதல் குறைந்தபட்சம் ₹70,000 கோடிக்கு மேல் விற்பனை வருவாயை மறைத்திருப்பது தெரியவந்துள்ளது.

மறைக்கப்பட்ட வருமானத்துக்கான அபராதத்துடன் கூடிய சரியான வரியை அதிகாரிகள் இன்னும் முழுமையாகக் கணக்கிடவில்லை. கண்டறியப்பட்ட இந்த மென்பொருள், மொத்த உணவக பில்லிங் மென்பொருள் சந்தையில் சுமார் 10% பங்கைக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1.77 லட்சம் உணவக ஐடிகளின் தரவுகளை உன்னிப்பாக ஆராய, பெரிய தரவு பகுப்பாய்வு மற்றும் ஜெனரேட்டிவ் AI போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தினர்.

இந்த ₹70,000 கோடி மறைக்கப்பட்ட விற்பனையில், நாடு முழுவதும் பில் செய்யப்பட்ட பிறகு ₹13,317 கோடி விற்பனை நீக்கப்பட்டிருப்பதாக மென்பொருள் நிறுவனம் பதிவு செய்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் ₹5,141 கோடி விற்பனை மறைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உள்ள 40 உணவகங்களில் நடத்தப்பட்ட மாதிரி ஆய்வில், சுமார் ₹400 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது.

வரி ஏய்ப்பு அதிகமாகக் கண்டறியப்பட்ட முதல் 5 மாநிலங்களாக தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. சுமார் ₹2,000 கோடி விற்பனையை மறைத்தன் மூலம் கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக தெலங்கானா (₹1,500 கோடி) மற்றும் தமிழ்நாடு (₹1,200 கோடி) ஆகியவை உள்ளன. சில உணவகங்கள், தங்கள் வருமான வரிக் கணக்கில் விற்பனையைக் குறைவாகக் காட்டியிருந்தாலும், பதிவுகளை அழிக்கவும் முயற்சிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாதிரி மதிப்பீட்டின் அடிப்படையில், மொத்த விற்பனையில் 27% மறைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

மென்பொருள் வழங்குநர் நிறுவனத்தின் அகமதாபாத்தில் உள்ள மையத்திலிருந்து தரவுகளைப் பெற்ற அதிகாரிகள், ஹைதராபாத்தில் உள்ள ஆயகர் பவன் டிஜிட்டல் தடயவியல் மற்றும் பகுப்பாய்வு ஆய்வகத்தில் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தனர். வேலை செய்பவர்கள், காசாளர்கள் மற்றும் மேலாளர்களால் நடக்கும் உள் மோசடிகளைத் தடுக்க, உணவகங்கள் அனைத்து விற்பனைகளையும் (கார்டு, யுபிஐ மற்றும் ரொக்கம்) மென்பொருளில் பதிவு செய்கின்றன என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால், ரொக்க பில்களைத் தேர்ந்தெடுத்து நீக்குவது ஒரு பொதுவான வழிமுறையாகும். வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி சுமையைக் குறைக்க, உணவகங்கள் ரொக்கப் பதிவுகளில் ஒரு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை நீக்கிவிடுகின்றன என்று தெரியவந்துள்ளது. இன்னொரு முறையானது மொத்தமாக பில்களை நீக்குவது ஆகும். அதாவது, 30 நாட்கள் வரையிலான பில்களை மொத்தமாக நீக்கி, உண்மையான விற்பனையில் ஒரு பகுதியைக் காட்டி கணக்குகளைத் தாக்கல் செய்வது ஆகும்.

ஆரம்பத்தில், ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் பிற நகரங்களில் கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டன. விற்பனையை மறைப்பதற்காக மென்பொருள் பயன்படுத்தப்படுவது அப்போது வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) விசாரணையை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்தது.

தற்போது கண்டறியப்பட்டவை ஒரு வெறும் சிறிய அளவிளான பகுதி மட்டுமே என்று அதிகாரிகள் கருதுகின்றனர். இந்தத் துறையில் இன்னும் பல பில்லிங் தளங்கள் செயல்படுவதாகவும், அவையும் இதேபோன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+