அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்:-ஓபிஎஸ் தரப்பு மனு டிஸ்மிஸ்-ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடையில்லை என்றும் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை கடந்த ஆண்டு விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும், கடும் மோதல் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம், ஆர்பி உதயகுமார், கே.பி.முனுசாமி உள்பட அதிமுகவின் பலரும் எடப்பாடி பழனிசாமி தான் ஒற்றை தலைமையாக மாற வேண்டும். அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினர்.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11-தேதி அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது. ஓ பன்னீர்செல்வத்துடன் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்பட சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

பொதுச்செயலாளர்
இந்நிலையில் கட்சியின் தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோதே கடந்த 17-ந் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

வழக்கு
இதற்கிடையே இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தனர்.

விசாரணை
இந்த வழக்குகளை நீதிபதி கே.குமரேஷ்பாபு கடந்த 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விசாரித்தார். அப்போது பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம், ஆனால் முடிவை அறிவிக்கக்கூடாது என்று அதிரடியாக உத்தரவிட்டார். மீண்டும் இந்த வழக்கை கடந்த 22-ந் தேதியும் (தெலுங்கு வருட பிறப்பு விடுமுறை தினத்தன்றும்) நீதிபதி கே.குமரேஷ்பாபு விசாரணை நடத்தினார்.

பதிவுத்துறை
அப்போது, இருதரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி டி.குமரேஷ்பாபு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 22-ந் தேதி உத்தரவிட்டார். இந்தநிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதி பிறப்பிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற பதிவுத்துறை நேற்று வெளியிட்டிருந்தது.

நீதிமன்றம் தீர்ப்பு என்ன
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடையில்லை என்றும் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை ரத்து செய்ய முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்துள்ளார். பொதுச்செயலாளர் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடையில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகப்போவது உறுதியாகி உள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications