மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்!
சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு சிங்கப்பெண் அதிரடிப்படைப்பிரிவை உருவாக்கியிருக்கிறது. இந்த படைப்பிரிவினருக்கு வித்தியாசமான சீருடையை காவல்துறை வழங்க இருக்கிறது. இந்நிலையில் இதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகப்பெரிய அளவில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருந்ததாக திமுகவினர் கூறி வந்தனர். திமுக ஆட்சியில் இதே குற்றச்சாட்டை அதிமுகவினர் வைத்திருந்தனர். இப்படி இருக்கையில், தற்போது தவெக அரசு பொறுப்பேற்றிருக்கிறது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டு இன்னும் குறையவே இல்லை.

குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. சமீபத்தில் கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. எனவே, இதுபோன்ற குற்றங்களை தடுக்க, தமிழ்நாடு அரசு சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்டை என்கிற படையை உருவாக்கியிருக்கிறது.
இதில் முழுக்க முழுக்க பெண் காவலர்கள் இடம் பெற்றிருப்பார்கள். பள்ளிகள், கல்லூரிகள், ஐடி பார்க்கள், காவல் நிலையம், ரயில் நிலையம் என முக்கியமான இடங்களில் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை உடனுக்குடன் தலையிட்டு தடுப்படுதான் இவர்களின் முக்கியமான பணி. இப்படி இருக்கையில், தற்போது இவர்களுக்கு புது சீருடை வழங்கப்பட இருக்கிறது.
வெளிநாட்டில் பெண் காவலர்களுக்கு வழங்கப்படும் பிரத்யேக சீருடைய இங்கேயும் வழங்கப்பட இருக்கிறது. வழக்கமாக காவல்துறையில் அனைவருக்கும் ஒரே மாதிரியாக, பிரவுன் நிற சீருடைதான் கொடுக்கப்படும். ஆனால், சிங்கப்பெண்கள் அதிரடிப்படையினருக்கு காக்கி பேண்ட் மற்றும் நீல நிறத்தில் சட்டை என புது சீருடை வழங்கப்பட இருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
கூட்டத்தில் இந்த கவலர்கள் மட்டும் தனித்து தெரியும் வகையிலும், குற்றங்களை கண்காணிக்கவும், குற்றவாளிகளை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்யவும் தேவையான கருவிகளை கொண்டிருக்கும் வகையிலும் இந்த சீருடை வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு.. பின்னணியில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்! -
"விஜயை வேலை செய்ய விடுங்க".. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி -
தவெகவில் புதிய அதிகார மையம்.. கூடுதல் பவரோடு ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த்.. கவனிச்சீங்களா? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
ரூ.1 லட்சம் மாமூல்.. செங்கல்சூளை உரிமையாளரை மிரட்டி தவெக நிர்வாகிக்கு நேர்ந்த கதி.. அதிரடி நீக்கம் -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்!












Click it and Unblock the Notifications