விடிவுகாலம்.. தேர்தல் முடிந்ததும் சென்னையின் முக்கிய பகுதி அடியோடு மாறுகிறது.. பிரம்மாண்ட பாலம் ரெடி
சென்னை: லோக்சபா தேர்தல் விதிகள் தளர்த்தப்பட்ட பின் ஜூன் மாதம் முதல் வள்ளுவர் கோட்டம் சாலையில் புதிதாக பாலம் கட்டப்பட உள்ளது. இதனால் அங்கே போக்குவரத்து மொத்தமாக மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. இதற்காக 67 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட உள்ளது.
இந்த மாதம் இறுதியில் அங்கே பேரிகேட் போடும் பணிகள் நடக்கும். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. அங்கே நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், பொங்கலுக்குப் பிறகு வள்ளுவர் கோட்டம் அருகே பாலம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி டெண்டர் விட உள்ளது.

அங்கே கட்டப்பட உள்ள நான்கு வழிப்பாதை பாலத்தால் நுங்கம்பாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வடபழனி நோக்கி செல்லும் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட உள்ளது.
ஜனவரியில் டெண்டர் முடிந்து பணி ஆணை வழங்கப்பட்டால், 18 மாதங்களில் பாலம் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அப்பகுதி மக்களுடன் பொது கலந்தாய்வு நடத்தப்படும். இதனால் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலம் கையகப்படுத்தும் பணிகள்: திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலத்தின் பரப்பளவைக் குறைத்துள்ளோம். சாலையில் உள்ள 37 தனியார் சொத்துகளை கையகப்படுத்தும் பணி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி பொது சுகாதார நிலையம் உள்ளிட்ட அரசு சொத்தின் நிலம் பாலத்திற்காக பயன்படுத்தப்படும் என்று மாநகராட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த திட்டத்தை விரைவுபடுத்தும் முயற்சியில், டிசம்பர் இறுதிக்குள் திட்டத்தின் சமூக தாக்க மதிப்பீட்டை சமர்ப்பிக்குமாறு ஆலோசகரிடம் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, நாங்கள் பொது கலந்தாய்வை நடத்துவோம். இந்த திட்டம் காரணமாக பெரிய அளவில் குடியிருப்புகளை மாற்ற வாய்ப்பில்லை, என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்மொழியப்பட்ட பாலம் மாம்பலம் கால்வாய்க்கு அருகாமையில் உள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை.
பாதுகாப்பான பாலம்: அதனால் இந்த பாலம் பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனமழையின் போது மழைநீர் கால்வாயில் செல்வதற்கு வசதியாக பாலத்தின் அமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு மாற்றத்திற்குப் பிறகு, 2,800 சதுர மீட்டர் நிலத்தின் விலை. இந்த பாலத்திற்காக ரூ.113 கோடி தனியார் சொத்து கையகப்படுத்தப்படும். இப்பகுதியில் தனியார் நிலத்தை கையகப்படுத்தும் செலவை விட, பாலத்தின் கட்டுமான செலவு ₹82 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
பழைய குப்பை பரிமாற்ற நிலையம், மெட்ரோவாட்டர் பம்பிங் ஸ்டேஷன், பூங்கா மற்றும் பொது சுகாதார CE ஆகியவற்றிலிருந்து நிலம் வாங்கி இங்கே பாலம் கட்டப்பட உள்ளது.
அண்ணாசாலை பாலம்; சென்னை அண்ணா சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்த திட்டத்திற்கான டெண்டர் விடும் பணிகள் முடிந்துள்ளன. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளது.
பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி பாலத்திற்கு இணையாக இந்த பாலம் கட்டப்பட உள்ளது. ஆனால் இந்த பாலம் போல இல்லாமல்.. இது ஹார்ட் ஆப் தி சிட்டி... அதாவது சென்னையின் மையத்தில் அண்ணா சாலையில் கட்டப்பட உள்ளது. 3.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழி சாலையாக உயர் மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது.
கீழே மெட்ரோ சுரங்கம் உள்ள நிலையில் அதற்கு பாதிப்பு ஏற்படாமல் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். பொறியியல் அதிசயம் என்று சொல்லும் விதமாக, மெட்ரோ சுரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் அண்ணாசாலையில் 3.2 கிமீ நீளம் கொண்ட தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை 4 வழிச்சாலைக்கான உயர்மட்ட தாழ்வாரத்திற்கான ஆர்டரை ஜே குமார் இன்ஃப்ரா குழுமம் தமிழக அரசிடமிருந்து பெற்றுள்ளது. 582 கோடி செலவில் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025 இறுதியில் இந்த பால கட்டுமானம் முடியும்.












Click it and Unblock the Notifications