சாதித்த அமைச்சர் தங்கம்.. ஏழைகளின் வயிற்றில் பாலை வார்த்த சிமெண்ட் உற்பத்தியாளர்கள்.. செம அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சிமெண்ட் நியாயாமான விலையில் விற்கப்படும் என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களின் பொருளாதாரமும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்றுள்ளது. காய்கறி விலையும் பொதுமக்கள் தொட முடியாத அளவுக்கு உச்சத்தில் சென்று விட்டது.

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு
இந்த நிலையில் பொதுமக்களுக்கு மேலும் பலத்த அடியாக சிமெண்டு, ஜல்லி கற்கள், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கடுமையாக உயர்ந்தன. ஏற்கனவே ஒரு வீடு கட்டுவதற்கு மிகவும் சிரமப்படும் நடுத்தர வர்க்கத்தினர் தற்போது கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் தத்தளித்து வருகின்றனர். கட்டுமான உற்பத்தியாளர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சுவார்த்தை நடத்தினார்.

தங்கம் தென்னரசு கோரிக்கை
கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். கட்டுமான பொருட்களின் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பொதுமக்களிடம் உறுதி அளித்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் சிமெண்ட் நியாயாமான விலையில் விற்கப்படும் என்று தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

உற்பத்தி நிலையங்கள் வருவாய் இழப்பு
இது தொடர்பாக அந்த சங்கம் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- கொரோனா காரணமாக சிமெண்ட் உற்பத்தி நிலையங்கள் பெரும் வருவாய் இழப்பில் உள்ளது. 40 சதவீத தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கி வருவதால் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் எல்லோரும் ஏற்றுக் கொள்ள கூடிய விலையில் சிமெண்ட் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சலுகை விலையில் சிமெண்ட்
நியாயமான விலையில், ஏழை, எளிய மக்களுக்கு சலுகை விலையில் சிமெண்ட் விற்பனை செய்ய தமிழ்நாடு
அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications