பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட்... தேர்தல் ஆணையம் அதிரடி!
சென்னை: பெண் எஸ்.பி.யிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறப்பு டிஜிபி அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த பாலியல் புகார் தொடர்பான அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சிறப்பு டிஜிபி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் எஸ்.பி. ஒருவர் டிஜிபி-யிடம் புகார் அளித்தார். இதையடுத்து, சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த பாலியல் புகார் தொடர்பான அறிக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பாலியல் புகாரில் சிக்கிய , சிறப்பு டிஜிபியை பணி நீக்கம் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்த சிறப்பு டிஜிபி இன்று இரவு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தேர்தல் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்த்துள்ளது.












Click it and Unblock the Notifications