மின் கட்டணம்.. தமிழ்நாடு மின்சார வாரியமே ஆச்சரியப்படும் அளவிற்கு நடந்த மாற்றம்.. குவிந்த கோடிகள்
சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி உள்ளார்கள். கடந்த ஆண்டு மின்கட்டணமாக ரூ.1,550 கோடி வசூல் ஆகி உள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.2,010 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை நுகர்வோர், அவர்கள் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மின் அட்டையின் மூலம் அறிவார்கள். அந்த அட்டையை எடுத்துக் கொண்டு மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று மின் கட்டணத்தை கட்டி வந்தனர்.

ஆனால் கடந்த 10 வருடங்களில் மின் கட்டணம் செலுத்தும் முறையில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது. குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆப் வழியாகவும், டிஜிட்டல் வழியாகவும் மின் கட்டணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் திட்டத்தால், மின் கட்டணத்தை செலுத்த அலுவலகம் செல்ல தேவையில்லை.. ஒரு நாள் வேலைக்கு லீவு போட தேவையில்லை.. அலைச்சல் இல்லை.. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவதால் பல்வேறு யுபிஐ தளங்கள் சலுகையும் தருகின்றன.
இதன் காரணமாக மின்கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேரில் அல்லது இணையதளம் வழியாக மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்கிற நிலை கடந்த சிலஆண்டுகளில் மெல்ல மெல்ல மாறியது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் கடந்த சில வருடங்களில் அறிமுகம் செய்தது. இதன்படி, நுகர்வோர்கள் கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான், பாரத்பே உள்ளிட்ட பல்வேறு யுபிஐ ஆப்கள் வழியாக செலுத்தலாம். மின் கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டாலே யுபிஐக்கள் மின் கட்டணத்தை அலார்ட் செய்கின்றன.
இதனால் மின்கட்டணம் செலுத்த மின்நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன்படியே ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் வரை 57.25 லட்சம் மின்நுகர்வோர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தைச் செலுத்தி உள்ளார்கள். இந்நிலையில், நடப்பு ஆண்டு 2024 ஏப்ரல் வரை 70.20 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தி உள்ளார்கள். இதேபோல், கடந்த ஆண்டு மின்கட்டணமாக ரூ.1,550 கோடி வசூல் ஆனது. இது இந்த ஆண்டு ரூ.2,010 கோடியாக அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி,கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் மின் நுகர்வோர் அதிகளவில் மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி இருக்கிறார்கள். ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவதையும், வாட்ஸ் அப் வழியாக மின் கட்டணம் செலுத்துவதையும் மின் வாரியம் ஊக்குவித்து வருகிறது.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
ஏசி பயன்படுத்துறீங்களா? இன்னும் சில நாளில் மின் கட்டணத்தில் ஷாக்கிங் மாற்றம்! ஏப்ரல் 1 புது விதி -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications