செப். முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருமழிசை சந்தை இயங்காது... காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு
சென்னை: செப்டம்பர் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் திருமழிசை காய்கறி சந்தை இயங்காது என அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனிடையே செப்டம்பர் 28ம் தேதி முதல் மீண்டும் கோயம்பேடு சந்தை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து பலருக்கும் கொரோனா தொற்று பரவியதால் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. அதற்கு பதில், காய்கறி சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு தான் இப்போது காய்கறி சந்தை இயங்கி வருகிறது. ஆனால் திருமழிசை காய்கறி சந்தை சென்னையில் இருந்து மிக நீண்ட தூரத்தில் இருப்பதால் மக்கள் அங்கு சென்று காய்கறி வாங்க அதிக ஆர்வம் காட்டவில்லை.

இதனிடையே தற்போது சென்னையில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் வலியுறுத்தி வந்தார்கள். இது தொடர்பாக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் வந்து கோயம்பேடு சந்தையை ஆய்வு செய்தார். அதன் பிறகு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. , அதன்படி முதல் கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வரும் 18ம் தேதி அன்று திறக்கப்படும், அதனைத்தொடர்ந்து காய்கறி மொத்த விற்பனை அங்காடி செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருமழிசையில் காய்கறி சந்தை வரும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது என அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications