வைரம் நொறுங்கிடுச்சி! மதிப்பே போச்சே! அந்த கல் பின்னாடி ஓடாதீங்க! ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்
சென்னை: உலக அளவில் தொடர்ந்து வைரத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. ஒரு காலத்தில் விலைமதிப்பற்ற பொருளாக இருந்த வைரத்தின் மதிப்பு சட்டென சரிய தொடங்கி உள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக வைரத்தின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் சரிவைக் கண்டுள்ளது, இது முதலீட்டாளர்கள், நகை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியமாக வைரத்தில் செய்யப்படும் முதலீடு என்பது மிகவும் மதிப்புமிக்க முதலீடாகக் கருதப்படும். ஆனால் வைரத்தின் மதிப்பு இப்போது குறைய காரணம் அதன் மீதான மோகம் குறைந்துள்ளது. அதோடு வைரத்தை தற்போது செயற்கையாக லேபிள் உருவாக்க தொடங்கிவிட்டனர்.

லேபிள் மூலம் உருவாக்கப்பட்ட வைரம், இயற்கையான வைரத்திற்கு இடையே வேறுபாடுகளையும் கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது. இது வைரத்தின் மதிப்பு குறைய முக்கிய காரணமாக உள்ளது என்று பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது மணிப்பேச்சு பக்கத்தில் விளக்கி உள்ளார்.
மக்களின் தேர்வுகள் மாறுவதுதான் சரிவுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அதாவது இப்போது பலரும் வைரத்தில் முதலீடு செய்வதை விரும்புவது இல்லை. இளைய தலைமுறையினர், குறிப்பாக மில்லினியல்கள் மற்றும் ஜெனரல் இசட் தலைமுறையை சேர்ந்தவர்கள் வைரத்தை விரும்பவில்லை.
ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட வைரங்கள் கொஞ்சம் விலை கம்மியாக இருப்பதால் அதை வாங்க மக்கள் விரும்புகின்றனர். உலக அளவில் பல நாடுகளில் டயமண்ட் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது. முன்பு போல இப்போது வைரம் அரிதான ஒன்று இல்லை. ஒரு விஷயம் எளிதாக கிடைக்கிறது என்றால் அதன் விலையும் கூட குறைவாகவே இருக்கும். அரிதான பொருட்களுக்கு மட்டுமே விலை அதிகமாக இருக்கும்.
இந்தியாவில் வைரம் விலை சரிவு:
இந்தியாவில் வைரத்தின் விலை கணிசமான வீழ்ச்சியை கடந்த சில மாதங்களில் சந்தித்துள்ளது. எடுத்துக்காட்டாக, ஆறு மாதங்களுக்கு முன்பு ₹2,50,000 விலையில் இருந்த 1 காரட் இயற்கை வைரம், இப்போது சுமார் ₹2,10,000க்கு விற்கப்பட்டு வருகிறது. அதாவது 16% குறைந்துள்ளது. உதாரணமாக நீங்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கு வைரம் வாங்கி இருந்தால்.. அதன் இப்போதைய விலை 8400 மட்டுமே.
அதிக அளவிலான வைரத்தின் உற்பத்தியும் இந்த சரிவுக்குப் பங்களித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு பிறகு உற்பத்தி கூடி உள்ளது. வைரச் சுரங்கங்கள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. இந்தியாவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை, தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டை விட 2024 முதல் பாதியில் இந்திய தங்க தேவை 1.5% அதிகரித்துள்ளது. தேவை அதிகரிக்க அதிகரிக்க விலை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் இதன் மதிப்பு மேலும் உயரும்.
2022 ஆம் ஆண்டில், 14KT, 18KT, 20KT, 22KT, 23KT மற்றும் 24KT ஆகிய ஆறு தங்க பிரிவுகளுக்கு இந்திய தரநிலைப் பணியகம் (BIS) ஹால்மார்க் செய்வதை கட்டாயமாக்கியது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் ஆகும். இந்தியாவின் தங்க தேவை அடுத்த ஆண்டு 750 டன்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த தங்கத்தை வாங்குபவர்கள் கூட பெரிய அளவில் வைரத்தை வாங்க விரும்புவது இல்லை என்று கூறப்படுகிறது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications