இதயம் நொறுங்கிவிட்டது.. மனைவி சாய்ரா பானு பிரிவால் கலங்கிய ஏஆர் ரஹ்மான்.. உருக்கமான பதிவு
சென்னை: 29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு ஏஆர் ரஹ்மான் - மனைவி சாய்ரா பானு ஆகியோர் பிரிவதாக அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், ஏஆர் ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛30வது திருமண நாளை எட்டிப்பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் இதயம் நொறுங்கிவிட்டது'' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா பிரபலங்களில் எந்த வித சர்ச்சையில் சிக்காமல் இருந்த வந்த ஜோடி தான் ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானு. பிரபல இசையமைப்பாளராகவும், ‛ஆஸ்கர்' வென்ற நாயகனாக இருந்தாலும் கூட ஏஆர் ரஹ்மான் கிசுகிசு மேட்டர்களில் சிக்கியது இல்லை.

இந்நிலையில் தான் திடீரென்று ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதி பிரிந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிவை அறிவித்துள்ளனர். இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்கள் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ள நிலையில் இருவரின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக ஏஆர் ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 30வது திருமண நாளை எட்டிப்பிடிப்போம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் எங்களின் எண்ணம் அதனை காண முடியாத நிகழ்வாக மாறி உள்ளது. நொறுங்கிய எங்களின் இதயத்தின் எடையை சுமக்க கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கலாம். பிரிவுக்கான அர்த்தத்தை கண்டறிந்து உடைந்த இதய துண்டுகளை ஒட்டவைக்க நினைத்தபோது அதற்கான பொருத்தமான இடம் இல்லை.
இந்த மோசமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது எங்கள் மீது அன்பு காட்டி தனியுரிமையை மதிக்கும் நண்பர்களுக்கு நன்றி'' என தெரிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் - சாய்ரா தம்பதியின் இந்த பிரிவு என்பது ஏஆர் ரஹ்மானின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
முன்னதாக சாய்ரா பானு - ஏஆர் ரஹ்மான் ஆகியோர் கூட்டாக தங்களின் பிரிவு பற்றி வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்டு இருந்தனர். அந்த அறிக்கையில், ‛‛"சாய்ரா பானு, அவரது கணவர் ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் சார்பில் வந்தனா (வழக்கறிஞர்) மற்றும் அவரது அசோசியேட்ஸ் சார்பில் இந்த கூட்டு அறிக்கை வெளியிடுகிறது. திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு மற்றும் அவரது கணவர் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளனர்.
உணர்ச்சிகரமான அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொரும் ஆழமாகவும் நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியதை இருவரும் அறிந்துள்ளனர்.
இந்த இடைவெளியை இணைக்க யாராலும் பாலம் போல் செயல்பட முடியாது. இதனால் இந்த முடிவை வலி மற்றும் வேதனையுடன் சாய்ரா பானு, ஏஆர் ரஹ்மான் எடுத்துள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் சாய்ரா பானு, ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் தனிப்பட்ட உணர்வுக்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும்'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications