நான் முதல்வன் திட்டத்தால் வேலைவாய்ப்பு பெறும் தமிழக இளைஞர்கள்! எப்படி சாத்தியம்?
சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கின்றனர்.
கடந்த 2002-2023ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 1.9 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நான் முதல்வன் திட்டம் என்றால் என்ன, அதன் மூலம் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி சாத்தியம்? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

நான் முதல்வன் திட்டம் என்பது முதலமைச்சர் ஸ்டாலினின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும். தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களை கல்வியில், அறிவில், ஆற்றலில், தனித்திறமைகளில் தலைநிமிர்ந்து நிற்க வைக்க தொடங்கப்பட்ட திட்டமாக நான் முதல்வன் திட்டம் திகழ்கிறது.
இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித் திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
நான் முதல்வன்" திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் இணையதளமானது, வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கேற்ப தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இலவச திறன் பயிற்சிகள், குறைவான கட்டணத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சிகள், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் "நான் முதல்வன்" இணையதளம் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் 3,50,000 மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில் திறன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கலை அறிவியல் கல்லூரிகளில் 15 லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்குரிய திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
பட்டப்படிப்புடன் சேர்த்து திறன்களையும் மாணவர்களுக்கு வளர்த்துவிடுவால் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் திட்டமாக நான் முதல்வன் திட்டம் பார்க்கப்படுகிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications