சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்

Google Oneindia Tamil News

Recommended Video

    அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்! அறைந்த தீட்சிதர்

    தம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்ணை தீட்சிதர் ஒருவர் அறைந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிதம்பரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி. இவரது மனைவி லதா (51). தனது மகனின் பிறந்தநாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார். அங்கு முக்குறுணி விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்ய சென்றார்.

    Theeksithar beats woman in temple who argues to perform archanai

    அப்போது அங்கிருந்த தீட்சிதர் தர்ஷனிடம் தேங்காயை கொடுத்த போது அர்ச்சனை ஏதும் செய்யாமல் தேங்காயை உடைத்து கொடுத்துள்ளார். இதற்கு அர்ச்சனை செய்யாமல் தேங்காயை மட்டும் ஏன் உடைத்தீர்கள் என லதா தட்டி கேட்டுள்ளார்.

    அதற்கு தீட்சிதர் தகாத வார்த்தைகளால் லதாவை திட்டியுள்ளார். இதையடுத்து உடைத்த தேங்காயை நான் வாங்கமாட்டேன் என லதா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர் லதாவை கன்னத்தில் அறைந்ததாகவும் அவர் சுருண்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து லதா அளித்த புகாரின் பேரில் தீட்சிதர் தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட தர்ஷனை போலீஸார் தேடி வருகின்றனர்.

    English summary
    Theeksithar in Chidambaram Natrajar temple beats a woman who opposes not doing Archanai. Police files case against him and searching going on.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X