சென்னை கொளத்தூர் ஆர்டிஓ ஆபீஸில் டிரைவிங் லைசென்ஸ் பெற போனால்.. இதுதான் நிலையா?
சென்னை: மோட்டார் சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமங்கள் பெறுவதற்கு மற்றும் பழகுனர் உரிமம் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் தற்போதைய நிலையில் சென்னை கொளத்தூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு சுமார் 40 நாட்கள் சர்வ சாதாரணமாக காத்திருக்கும் நிலைமை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 பகுதி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தான் பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.), ஓட்டுனர் உரிமம் வழங்குதல், உரிமங்கள் புதுப்பித்தல், வாகனங்களை மறுபதிவு செய்தல், வாகனங்களுக்கு உரிமையாளர் மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல், சர்வதேச வாகன உரிமம் வழங்குதல், வாகனங்களை பதிவு செய்தல், வாகனங்களுக்கு உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பொதுமக்கள் மேற்கொள்ள முடியும்.

குறிப்பாக சொல்வது என்றால், இருசக்கர வாகனம் மற்றும் கார், மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவதற்கு இந்த அலுவலகங்கள் வாயிலாக ஓட்டுனர் உரிமங்கள் (டிரைவிங் லைசென்ஸ்) பெற முடியும். ஆனால் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு முதலில் பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற்றாக வேண்டியது அவசியம் ஆகும்.

ஆனால் இதுபோன்ற உரிமங்கள் பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இந்த நிலையில், சென்னை ரெட்டேரி 100 அடி சாலையின் அருகில் இயங்கி வரும் கொளத்தூர் ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு சுமார் 40 நாட்களுக்கு மேல் மக்கள் காத்திருக்கும் நிலை இருப்பதாக புகார்கள் எழுந்தது. பொதுவாக கொளத்தூரை பொறுத்தவரை பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற்ற பின்னர் ஒரு மாதத்திற்கு பின்னர் 6 மாத காலத்திற்குள் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். ஆனால், அதற்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இந்த 'ஆன்-லைன் ஸ்டாட் புக்கிங்' செய்வதற்கு தான் கொளத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மக்கள் சுமார் 40 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி உள்ளதாக ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இதுபற்றி ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கூறுகையில், கொளத்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மொத்தம் 3 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இருந்தார்கள். அந்த அலுவலகத்தில் தற்போது ஒரே ஒரு மோட்டார் வாகன ஆய்வாளர் மட்டுமே இருக்கிறார்கள். மேலும் இந்த அலுவலகத்திற்கு என தனி ஆர்.டி.ஓ. அதிகாரி இல்லை, பொறுப்பு அதிகாரி தான் வாரத்திற்கு 2 நாட்கள் வந்து செல்கிறார். இதனால் தாமதம் ஏற்படுகிறது என்றார்கள். இந்நிலையில் ஓட்டுனர் உரிமம் பெற மக்கள் 40 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்றும் அந்த குறைகள் களையப்பட்டு உடனுக்குடன் ஓட்டுனர் உரிமம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உயர் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான்












Click it and Unblock the Notifications