அதிமுக மற்றும் மோடி ஆட்சியில் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற வழியே இல்லை.. ஸ்டாலின் ஆவேசம்
Recommended Video
சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் தேர்தல் அதிகாரிகள் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டு இருப்பது, ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் சவால் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக மற்றும் மோடி ஆட்சியில் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற வழியே இல்லை என சாடியுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த முடியாமல் தலைமை தேர்தல் அதிகாரியும், தேர்தல் ஆணையமும் திணறி நிற்கின்றனர். ஆளுங்கட்சியினரின் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. அதேபோல தருமபுரியில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை கைப்பற்றி பாமகவுக்கு வாக்களித்ததையும் தடுக்கவில்லை.

பொன்பரப்பியில் வாக்குப்பதிவில் நடந்த தில்லுமுல்லுகளையும் தேர்தல் ஆணையத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். எனவே வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால் இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்குமா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வாக்கு இயந்திரங்கள் இருந்த அறைக்குள் நுழைந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
தாசில்தார் உள்ளிட்டோர் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அத்துமீறி நுழைய அனுமதித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணும் மையங்களை திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்குள் பெண் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் சிலர் அதிகாலை 3 மணி அளவில் உள்ளே நுழைந்து, இரண்டு மணி நேரம் மேல் அங்கேயே இருந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்திருக்கலாம் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications