ஈகோவா? எங்களுக்கா? நோ! நோ! துணை நிலை ஆளுநருக்கும் அதிகாரம் இருக்குங்க - தமிழிசை தடாலடி
சென்னை: புதுச்சேரி மக்களுக்காக முதலமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் தங்களுக்குள் ஈகோ பிரச்சனையை உருவாக்க முடியாது
எனவும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி நேற்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் ஆள தகுதி இல்லாதவர்கள் பதவி விலகிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாராயணசாமி குற்றச்சாட்டு
"புதுச்சேரியின் சூப்பர் முதலமைச்சராக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும், முதலமைச்சர்களாக அனைத்து அமைச்சர்களும் உள்ளார்கள். ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் என்.ஆர்.காங்கிரஸ் அரசில் அதிகரித்து உள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துக்கள். மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்பாக அவர் இருக்க மாட்டார் என்று நம்புகிறேன்." என்றார்.

தமிழிசை பேட்டி
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனிடம், நாராணசாமியின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என பேசிய பாரதியாரின் மண் புதுச்சேரி. புதுச்சேரியில் உள்ள எல்லாரும் அமைச்சர்கள். புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம்
புதிய மதுபான ஆலை திறப்பது கொள்கை முடிவு. இது பற்றி சம்பந்தப்பட்ட துறையிடம் தான் கேட்க வேண்டும். எல்லாம் நேர்மறையாக நடக்கிறது. ஆக்கப்பூர்வமாக நடக்கிறது. எல்லா பள்ளிகளுக்கும் நான் செல்கிறேன். ஆளுநர் வேறு துணை நிலை ஆளுநர் வேறு. துணை நிலை ஆளுநருக்கு சில முடிவுகளை எடுக்க கூடிய அதிகாரம் இருக்கிறது.

ஈகோவை உருவாக்க முடியாது
நானும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் இணைந்து பணியாற்றுகிறோம். நாராயணசாமியால் இணைந்து பணியாற்ற முடியவில்லை. நாங்கள் இணைந்து பணியாற்றுவது அவருக்கு வாட்டுகிறது. ஆதனால் இப்படி பேசிகிறார். இருவருக்கு இடையே ஈகோவை உருவாக்க நினைக்கிறார். எங்கள் இருவர் இடையே ஈகோவை உருவாக்க முடியாது. மக்களுக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம்.

தமிழ்நாடே எனக்கு உயிர்
நான் அரசு பள்ளிகளுக்கு செல்கிறேன். பல பள்ளிகளுக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக முதலமைச்சரிடம் பள்ளி மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த நான் சொல்கிறேன். இணைந்து பணியாற்றுவதால் அப்படி பேசுகிறார். தமிழகத்திற்கு தமிழ் மகளாக எல்லா நிகழ்ச்சிக்கும் வருவேன். தமிழ்நாடுதான் எனக்கு உயிர் என்பதால் கலந்து கொள்வேன்." என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications