3 லட்சம் ரூபாய் பைக் சார்.. நொடியில் தூக்கிய திருடன்.. சென்னை ஆதம்பாக்கத்தை அதிர வைத்த சம்பவம்
சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் 3 லட்ச ரூபாய் மதிப்புடைய பைக்கை ஒரு சில நிமிடங்களில் சைடு லாக்கை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் எவ்வளவு தான் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், திருடினால் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் பலர் திருடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களை திருடுவது அதிகமாக இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை பல பகுதிகளில் உள்ள வீடுகளில் வாகன நிறுத்தம் வசதிகள் இருக்காது. வீடுகளை ஒட்டிய சாலையோரங்களில் தான் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தனியாக நிற்கும் பைக்குகளை நோட்டம் விடும் திருடர்கள், லாவமாக சைட்லாக்கை உடைத்து, அந்த பைக்கை எடுத்து கொண்டு சென்று வெளியூர்களில் உள்ள கிராமப்புறங்களில் அப்பாவிகளிடம் விற்றுவிடுகிறார்கள். அவர்கள் காடு, வயல் என, கிராமப்புறங்களில் மட்டுமே ஓட்டுவதால் திருடுபோன பைக்குகள் குறித்து எந்த தகவலும் அவர்களுக்கும் தெரிவது இல்லை. என்றாவது ஓரு நாள் போலீசிடம் சிக்கும் போது தான், அது திருட்டு பைக் என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது,.
பைக்குகளை பொறுத்தவரை திருடுபவர்கள் என்ஜினை தவிர எல்லா பொருட்களையும் பாதி விலைக்கு விற்கும் நிகழ்வுகளும் அடிக்கடி நடக்கிறது. சில நேரங்களில் இன்ஜினையும் பழைய வண்டிகளில் பொறுத்த வைத்து அதையும் விற்றுவிடுகிறார்கள். சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் திருடப்படுகிறது. இந்த கும்பல்கள் அவ்வப்போது தான் சிக்குகின்றன.
அப்படி சிக்கும் போது தான் அவர்களிடம் இருந்து மொத்தமாக பைக்குகளை போலீசார் கைப்பற்றி உரியவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். அதேநேரம் பெரிய அளவில் திருட்டுகள் நடைபெறும் போது , தனிப்படை அமைத்து போலீசார் திருடர்களை தேடி கண்டுபிடித்து வாகனங்களை மீட்கும் சம்பவங்களும் அடிக்கடி சென்னையில் நடக்கிறது.
இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் 3 லட்ச ரூபாய் மதிப்புடைய பைக்கை வெறும் மூன்றே நிமிடத்தில் சைடு லாக்கை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சொகுசு பைக்குகளை குறிவைத்து திருடும் இந்த கும்பல்கைளை பிடித்து வாகனங்களை மீட்பதுடன், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications