மாஜி சபாநாயகர் தனபாலை விடுங்க.. மாமன்னன் எதை நினைவுபடுத்துகிறது தெரியுமா.. திருமாவளவன் விளக்கம்
சென்னை: இங்கே அமர்வதும் நிற்பதும் சாதியின் அடையாளங்களாக இருக்கின்றன என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் முன்னாள் சபாநாயகர் தனபாலை பற்றி எடுக்கப்பட்டிருப்பதாக பேசப்பட்டது. இந்த நிலையில் அவர் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியிருப்பதாவது: மாமன்னன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. நண்பர்கள் தகவல் சொன்னார்கள். 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இருக்கிறேன். நான் அம்மாவின் தீவிர விசுவாதி. என்னுடைய உழைப்பை பார்த்து கட்சியில் அமைப்புச் செயலாளர் , அமைச்சர், சபாநாயகர் ஆகிய பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.
என்னுடைய சாயலில் இந்த படம் வந்திருந்தால் அது அம்மாவுக்குக் கிடைத்த வெற்றி என்றார். இந்த படம் ஆரம்பத்தில் தியேட்டர்கள் ஹவுஸ் புல் ஆகவில்லை என சொல்லப்பட்டாலும் இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனத்தை பார்த்த பலர் தியேட்டருக்கு படையெடுக்கிறார்கள்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில் சனாதனத்தின் அடிப்படை கூறாக இருக்கிற பாகுபாட்டை படத்தின் கருப்பொருளாக எடுத்து சாதி வெறிக்கும் சமூக நீதிக்குமான போரில் சமூக நீதி வெற்றி பெறும் என்பதை இயக்குநர் மாரி செல்வராஜ் உணர்த்தியுள்ளார்.
நட்சத்திர சின்னம், தேர்தல் பின்னடைவு எல்லாரும் வென்றார்கள் என்ற அறிவிப்புக்கு பிறகு மாமன்னன் வெற்றி அறிவிப்பு என்பது 2019 சிதம்பரத்தில் என்னுடைய தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்பட்ட பதற்றத்தை நினைவுப்படுகிறது. இமானுவேல் சேகரன் கூட அமர்ந்திருந்தால் தான் கொல்லப்பட்டார்.
இங்கே அமர்வதும் நிற்பதும் சாதியின் அடையாளங்களாக இருக்கின்றன என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த படம் ஒரு பிளாப் படம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் இந்த படம் தான் தனது கடைசி படம் என அமைச்சர் உதயநிதி கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications