பாம்பை கண்டு படையே நடுங்குவதால் அது பலசாலி என்றாகிவிடுமா.. பாஜக விஷம்.. சீறிய திருமாவளவன்
Recommended Video

சென்னை: பாம்பை கண்டு படையே நடுங்குவதால் அது பலசாலி என்றாகிவிடுமா என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஜினி எப்போதும் பேசினாலும் அது விவாத பொருளாகிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு ரஜினியிடம் 7 தமிழர்கள் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ரஜினியோ எந்த 7 பேர், எனக்கு எதுவும் தெரியாது என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பலசாலி
அதை விட ஒருவரை 10 பேர் எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி என்பதை நீங்கள் சொல்லுங்கள் என செய்தியாளர்களிடம் கேட்டு சூசகமாக எதிர்க்கட்சிகள் மோடியை எதிர்ப்பதால் அவர் பலசாலி என்றார் ரஜினி.

நிரூபணம்
இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என சொன்னதிலிருந்தே இது பாஜகவின் அசைன்மென்ட் என பெரும்பாலானோர் விமர்சித்த நிலையில் ரஜினி பச்சையாக தான் பாஜக ஆதரவாளர் என்பதை இதன் மூலம் நிரூபித்து விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருதினர்.

பலசாலியல்ல
இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில் பாம்பை கண்டு படையே நடுங்கும் என்பதால் பாம்பு பலசாலியல்ல படையே நடுங்கும். அந்த அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது; ஆபத்தானது என்றே பொருள் படும் விஷம் கொண்ட பாம்பைப்போல்தான் பாஜகவை பார்க்கிறோம் என்று திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

ஆட்டு மந்தைகள்
திருமாவளவனின் இந்த பதிலுக்கு தமிழிசை உரிய பதிலடி கொடுத்துள்ளார். அதாவது ஆட்டுமந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா ? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
[ஆட்டு மந்தைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் சிங்கத்தைவிட பலமானதா ?-தமிழிசை]
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications