"அண்ணே திருமா".. ஒன்னும் பிரச்சனை இல்லை.. அதே விஷயத்தை கன்பார்ம்டு செய்த திருமாவளவன்.. குளிரும் திமுக
சென்னை: திடீர் திடீர் சலசலப்புகள் எழுந்துவந்தாலும், திமுகவுடனான கூட்டணியை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார் விசிக தலைவர் திருமாவளவன்.. அத்துடன் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும், சலுகைகளும் பெற்றுத்தர தமிழக அரசு தனி தீர்மானம் கொண்டுவந்தது, சமூக நீதி வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் தொல்.திருமாவளவன்.
2 நாட்களுக்கு முன்பு, திருமாவளவனிடம் ஒரு செய்தியாளர், "திமுககாரர் போல பேசுகிறீர்களே" என்று கேள்வி கேட்டார். அதைக்கேட்டு கோபமடைந்த திருமாவளவன், அப்போதே காட்டமாக பதிலடி தந்தார்.
"இந்த மாதியெல்லாம் பேசுகிற வேலையை வைத்துக்கொள்ளாதீர்கள்... அதை வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள். இது நாகரிகம் இல்லாதப் பேச்சு. ஆகையால் நாகரிகம் தவறி பேசாதீர்கள் " என்றார்..
"இந்த மாதிரியெல்லாம் பேசுகிற வேலையை வைத்துக்கொள்ளாதீர்கள்... அதை வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள். இது நாகரிகம் இல்லாதப் பேச்சு. ஆகையால் நாகரிகம் தவறி பேசாதீர்கள் " என்றார்..

திருமாவளவன்: உடனே இன்னொரு செய்தியாளர், "என்ன கை நீட்டி பேசுறீங்க" என்று கேட்கவும், அதற்கு திருமாவளவன், 'உங்க முன்னாடி கையை கட்டி பேச வேண்டுமா? குனிஞ்சிக்கிட்டு நிற்க வேண்டுமா? என்று கேட்டிருந்தார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து, திருமாவளவனே ஒரு விளக்கம் தந்திருந்தார்.. நேற்று விடிகாலை 3 மணிக்கு ட்வீட்டை போட்டு, அதில் விளக்கமளித்திருந்தார்.
"வேங்கைவயல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, விசிக மற்றும் அதன் தலைமை மீதான நம்பகத்தன்மையைச் சிதைக்க வேண்டுமென்பதே அந்த செய்தியாளரின் கேள்வியில் இழையோடும் உள்நோக்கமென புலப்படுகிறது. பாதிக்கப்பட்டோரின் பக்கம் நின்று, கூட்டணி கணக்குகளை முன்னிறுத்தாமல், நேர்மை திறத்தோடு போராடி கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தை மற்றும் அதன் தலைமையை, ஒரு குதர்க்கமான கேள்வியின் மூலம் சிறுமைப்படுத்தும் நோக்கமே அதில் வெளிப்படுகிறது. அதோடு, அந்தக் கேள்வி பாதிக்கப்பட்ட வேங்கைவயல் மக்களின் மீதான கரிசனம் இல்லை என்பது மட்டும்தான் இதில் உணர வேண்டிய உண்மை நிலையாகும்" என பதிவிட்டார்.

எச்சரிக்கை தோழர்களே: இதற்கு பிறகு, திருமாவளவன் இன்னொரு விளக்கமும் தந்தார்.."என்னிடம் கேள்வி கேட்ட டிவி அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு கண்டனம் என்கிற பெயரில், நமது தோழர்கள் யாரும் நாகரிக வரம்பு மீறல் செய்வது கூடாது... அது எவ்வகையிலும். ஏற்புடையதல்ல. நமது பெயரில் நாகரிகக் கேடர்கள் திட்டமிட்டு ஊடுருவி ஏதேனும் வரம்பு மீறிப் பேசவும், பொதுவெளியில் நமக்கு எதிரான ஒரு பிம்பத்தை உருவாக்கிடவும் முனைவார்கள். அதற்கு நாம் இடம் தரக் கூடாது. எனவே, தோழர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இதனைக் கடந்து செல்லவும்" என்று திருமாவளவன் அறிவுறுத்தியிருந்தார்.
ராஜிவ்காந்தி: மிகுந்த பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவம் சோஷியல் மீடியாவிலும் எதிரொலித்தது.. ஏராளமான சிறுத்தைகள் ஒன்றுதிரண்டு திருமா பக்கம் நின்றார்கள்.. கூட்டணி கட்சிகளும் திருமாவளவனுக்கு ஆதரவை வெளிப்படுத்தின.. குறிப்பாக, திமுக மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி, ஒரு ட்வீட்டை போட்டு திருமாவளவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.. அதில், அண்ணன் திருமாவளவன் எம்பி அவர்கள் எப்போதும் ஊடகவியலாளர்களை ஒருமையில் பேசியது இல்லை, பேசுவதும் இயல்பிலேயே இல்லை! உள்நோக்கத்தோடு கேள்வி கேட்ட செய்தியாளரை உள்நோக்கம் கொண்டு கேள்வி கேட்காது ஆதாரத்தோடு கேளுங்கள் என சுயமரியாதையோடு அண்ணன் திருமா அவர்கள் பேசியது மிக மிக சரியே!, என்றார்.
இந்நிலையில், திண்டுக்கல்லில் பேசிய திருமாவளவன், சமூக நீதிக் காவலர் வி பி சிங்க்கு தமிழகத்தில் உருவ சிலை திறப்பது என்பது வரவேற்கத்தக்கது. கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும், சலுகைகளும் பெற்றுத்தர தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதனை விடுதலை சிறுத்தைகள் சார்பில் வரவேற்கிறோம். சமூக நீதி வரலாற்றில் இது ஒரு மைல் கல்.
கன்பார்ம்டு: திமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி. இந்த கூட்டணியில் எந்த சிக்கலும் கிடையாது. திமுகவிற்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே இருப்பது நட்புணர்வு, கொள்கை சார்ந்த உறவு. தேர்தல் களத்தில் மட்டும் அல்லாது சமூக நீதிக்கான களத்தில் தொடர்ந்து இணைந்து பயணிக்க கூடிய வலுவை பெற்று இருக்கக் கூடிய கூட்டணி ஆகும். அதனால் தொடர்ந்து நாங்கள் திமுக கூட்டணியில் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்" என்று கூறி கூட்டணியை மீண்டும் உறுதி செய்துள்ளார்..!!
-
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications