தலித் முத்திரை குத்தி முடக்க முயன்றோரின் சதியை முறியடித்த பானை.. சிறுத்தைகளின் சாதனை.. திருமா
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவது விடுதலைச் சிறுத்தைகளின் வரலாற்றுச் சாதனை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சனாதன சக்திகள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடக் கூடாது. இந்த தேர்தல் சனாதன சக்திகளை வீழ்த்த வேண்டிய போர்தான் இந்த சட்டசபைத் தேர்தல்.

புதுவை
தமிழகம் மற்றும் புதுச்சேரியை குறிவைத்து செயல்படும் பாஜகவை தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதால் 6 தொகுதிகளை ஏற்பதாக திருமாவளவன் தெரிவித்தார். இதனால் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் செய்யூர், காட்டுமன்னார்கோவில், வானூர், திட்டக்குடி, உளுந்தூர்பேட்டை, மயிலம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.

4 தொகுதிகள்
இதில் போட்டியிட்ட 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் 2 பொதுத் தொகுதி, 2 தனித்தொகுதி. 67% வெற்றி. வெறுப்பு அரசியலைத் தகர்த்தெறிந்து வெல்லும் விடுதலைச்சிறுத்தைகள்.

வரலாற்றுச் சாதனை
தலித் கட்சியென முத்திரை குத்தி சுருக்கி முடக்கி தனிமைப்படுத்த முயன்றோரின் சதியை முறியடித்தது பானை. இது சிறுத்தைகளின் #வரலாற்றுச்_சாதனை.
வழக்கம்போல ஊடகங்கள் இருட்டடிப்பு என திருமா தெரிவித்துள்ளார்.

அவதூறு
திருமாவின் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 14 நாட்கள் இடைவெளியில் அறிமுகமான சின்னம். விடுதலைச் சிறுத்தைகளின் #பானை_சின்னம். சாதி-மதவெறியர்கள் பரப்பிய #அவதூறுகளை_நொறுக்கித் தவிடு பொடியாக்கிவிட்டு வெற்றி இலக்கை எட்டுகிறது பானை என மற்றொரு ட்வீட்டில் திருமா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications