வட இந்தியா போல வெறுப்பு பேச்சு..பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக..டிஜிபியிடம் புகார் சொன்ன திருமாவளவன்
வட மாநிலங்களில் இப்படித்தான் பாஜகவினர் வெறுப்பு பேச்சின் மூலம் வெறுப்பு பிரச்சாரங்களின் மூலம் வன்முறையை தூண்டி, ஆதாயம் தேடி வருகின்றனர்.
சென்னை: பாஜகவினர் திட்டமிட்டு தமிழ்நாட்டில் வன்முறையை தூண்ட முயற்சி செய்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். டிஜிபியை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு நெருக்கடியை தர வேண்டும் சமூக பதற்றத்தை உருவாக்க வேண்டும். அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று பாஜக குறி வைத்து வேலை செய்வதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு டிஜிபியை சந்தித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டேன்.
தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் பாஜகவினர் திட்டமிட்டு பொது வெளியில் பொது மேடையில் பேசி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பாஜகவினர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் பேசியது வன்முறையை தூண்டும் வகையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர் ஒருவர் குண்டு வீசுவோம், துப்பாக்கியால் சுடுவோம் என்று பேசியிருப்பது வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. அதை தமிழ்நாடு பாஜக தலைவர் வெளிப்படையாக ஊக்கப்படுத்தும் வகையில் பேசுகிறார்.
இதை எல்லாம் பார்க்கும் போது பாஜகவினர் திட்டமிட்டு தமிழ்நாட்டில் வன்முறையை தூண்ட முயற்சி செய்கின்றனர். தமிழ்நாடு அரசுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு நெருக்கடியை தர வேண்டும் சமூக பதற்றத்தை உருவாக்க வேண்டும். அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று பாஜக குறி வைத்து வேலை செய்கிறது.
வட மாநிலங்களில் இப்படித்தான் பாஜகவினர் வெறுப்பு பேச்சின் மூலம் வெறுப்பு பிரச்சாரங்களின் மூலம் வன்முறையை தூண்டி, ஆதாயம் தேடி வருகின்றனர். வடமாநிலங்களில் பின்பற்றக்கூடிய அதே உத்திகளை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில்தான் திருவள்ளுவருக்கு காவி உடை போர்த்துவது, பெரியாருக்கு காவி சாயம் பூசுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து திருநீறு பூசி அவமதிப்பது போன்ற காரியங்களை பாஜகவினர் செய்து வருகின்றனர்.
சமூக நீதி பயணம் மேற்கொண்ட கி. வீரமணி அவர்களின் வாகனத்தை மறித்து வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்தனர். இப்படி மாநிலம் முழுவதும் பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக டிஜிபியின் பார்வைக்கு கொண்டு சென்றோம்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications