திருவாரூர் தேர்தலில் ஸ்டாலின் நிற்கிறாரா? பரபர கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதிலை பாருங்க!
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் யார் என்று விரைவில் அறிவிக்க போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் யார் என்று விரைவில் அறிவிக்க போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜனவரி 28-ம் தேதி நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது.
அனைத்து கட்சிகளும் பரபரப்பாக தயாராகி வருகிறது. தேர்தலுக்கு திமுகவும் தயாராக தொடங்கிவிட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் திமுகவினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தீவிர ஆலோசனை
இந்த நிலையில் திமுக நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கனிமொழி உள்ளிட்ட முக்கிய திமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ஸ்டாலின் பேட்டி
இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 2.30 மணி நேரம் நடந்தது. ஆலோசனைக்கு பின் திமுக தலைவர் ஸ்டாலின்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், திருவாரூர் தேர்தலில் திமுக யாரை நிறுத்தும் என்று விரைவில் தெரியும். இப்போதுதான் விருப்ப மனுக்களை பெற்று வருகிறோம். நாளை இதற்காக நேர்காணல் செய்ய இருக்கிறோம். அதன்பின்தான் வேட்பாளரை தேர்வு செய்ய முடியும். வெற்றி வேட்பாளர் யார் என்று விரைவில் தெரியும்.
ஸ்டாலின் நிற்கிறாரா?
தேர்தலில் நான் நிற்பேனா, துரைமுருகன் நிற்பாரா இல்லையென்றால் அண்ணன் டி.ஆர் பாலு நிற்பாரா என்று விரைவில் தெரியும். ஜன.4ம் தேதி திமுக வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும். முழு ஆலோசனைக்கு பின் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடுவோம்.
திமுக தொண்டர்கள்
தேர்தலில் யார் நின்றாலும் திமுக தொண்டர்கள் அவர்களுக்காக உழைக்க வேண்டும். மாவட்ட செயலாளர்கள். வட்ட செயலாளர்கள் ஆகியோர் கண்டிப்பாக தேர்தலில் தீவிரமாக உழைக்க வேண்டும். எல்லோரும் ஏற்றுக்கொள்ள கூடிய வேட்பாளரை விரைவில் அறிவிப்போம், என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.