Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இந்த 15 இடங்கள் தான்.. 2026ல் நகரின் தலையெழுத்தையே தீர்மானிக்க போகுது.. நீங்களே பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் மாதவரம், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், போரூர், மொத்தம் 15 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களில் வழித்தடம் மாறி ஏறி பயணம் செய்யும் வசதியும் உருவாக்கப்படுகிறது.

சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை இருவழித்தடங்களில் (கோயம்பேடு, திருமங்கலம் வழியாக ஒரு தடம், சைதாப்பேட்டை, நந்தனம் வழியாக மறுதடம்) ரயில்கள் 55 கிமீ தூரத்திற்கு இயக்கப்படுகிறது.

This 15 stations will very important on the Chennai Metro rail line in 2026

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தினசரி 3 முதல் 4 லட்சம் ஆக உள்ளது. அதேநேரம் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை 35 லட்சமாக உள்ளது.வரும் காலத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை விரைவில் பெரிய அளவில் உயர வேண்டும் என்றால், சென்னை அனைத்து பகுதிகளையும் டவுன் பஸ்கள் போல் மெட்ரோ ரயில் வழித்தடத்தை இணைத்தாக வேண்டியுள்ளது.

அதன்படியே சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் - சிறுசேரி இடையே 45.4 கி.மீ தொலைவுக்கு 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே 26.1 கி.மீ தொலைவுக்கு 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 44.6 கி.மீ தொலைவுக்கு 5-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்ட பாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில்நிலையங்கள் அமைக்கும் பணிகள் சென்னை நகரம் . இந்த நிலையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் 15 ரயில்நிலையங்களில் வழித்தடம் மாறும் வசதி அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை 2026-ம் ஆண்டு முதல் படிப்படியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.

தற்போது உள்ள பஸ் நிலையங்கள், ரயில்நிலையங்கள், முதல் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் போக்குவரத்தை இணைக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் வழித்தடம் மாறி ஏறி பயணம் செய்யும் வசதியும் உருவாக்கப்படுகிறது.

மாதவரம், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், போரூர், ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், கோயம்பேடு புறநகர் பஸ்நிலையம், திருமங்கலம், வடபழனி, நந்தனம், பரங்கிமலை, ஆலந்தூர் ஆகிய 15 மெட்ரோ ரயில்நிலையங்களில் ஒரு வழித்தடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்துக்கு மாறி ஏறி செல்லும் வசதிகள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் 2026 முதல் 2028ம் ஆண்டுக்குள் படிப்படியாக 2க்கட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் போது சென்னையில் மக்கள் மெட்ரோ ரயிலையேஅதிகம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+