தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. அருணா ஜெகதீசன் ஆணைய பணி மேலும் 6 மாதம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு
அருணாஜெகதீசன் ஆணையத்துக்கு 6 மாசம் மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
சென்னை: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கொடுத்தது தமிழக அரசு உத்தரவிட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்... அதன் 100வது நாள் போராட்டத்தில் கலவரம் நடந்ததால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

துப்பாக்கி சூடு
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது.. அதன்படி தூத்துக்குடி வந்து விசாரணையை நடத்தி வருகிறார் அருணா ஜெகதீசன்.. துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களில் ஆய்வு, பலியானவர்கள் குடும்பத்தினரிடம் நேரடியாக சென்று விசாரணை என அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட்டார்.

விசாரணை
பிறகு, பொதுமக்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, அதன் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யபட்டது... கடந்த மே மாதம்கூட, அருணா ஜெகதீசன், முதல்வர் ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்..

பிப்ரவரி
தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 2022ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி வரை ஆறுமாதம் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ரஜினி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்கும் இந்த ஆணையம் தான் ரஜினியையும் விசாரணைக்கு அழைத்தது... ஆனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்கப்பட்டது.. அதேசமயம் எழுத்து பூர்வமாக ரஜினி ஒரு விளக்கமும் அறிக்கையாக தந்திருந்தார்.. ஆனால் அதில் சில சந்தேகம் உள்ளதாக ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 6 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரஜினியிடம் மீண்டும் விளக்கம் கேட்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள்












Click it and Unblock the Notifications