திமுகவில் இணைந்தார் தோப்பு வெங்கடாசலம்.. ஈரோடு ஸ்டாலினின் எஃகு கோட்டை என முழக்கம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டார். அவருடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.
Recommended Video
ஈரோடு மாவட்டம் பெருந்துறை எம்எல்ஏவாக இருந்தவர் தோப்பு கே வெங்கடாசலம். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பெருந்துறையில் போட்டியிட்டு வென்றார். 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதால் இவருக்கு அமைச்சர் பதவியை ஜெயலலிதா கொடுத்தார்.

பெருந்துறை பகுதி
பின்னர் 2016ஆம் ஆண்டும் அதே பெருந்துறை பகுதியில் போட்டியிட்டு தோப்பு வெங்கடாசலம் வென்றார். ஆனால் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அதே மாவட்டத்தில் உள்ள கே சி கருப்பண்ணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஜெ மறைவு
ஜெயலலிதா மறைந்த பிறகும் தோப்பு ஓரங்கப்பட்டிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைத்த போது தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரவையில் தோப்புக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஏமாற்றமே விஞ்சியது.

கருப்பண்ணனுடன் மோதல்
இதையடுத்து தொடர்ந்து கருப்பண்ணனுடன் மோதல் போக்கு இருந்தது. இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட தோப்பு வெங்கடாசலம் விருப்ப நனு தாக்கல் செய்தும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

தோப்பு கே வெங்கடாசலம்
இதன் அதிமுக மீது கடும் கோபமடைந்த தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்றைய தினம் தோப்பு கே வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications