பதில் இல்லாதவர்கள் தான் கேள்விகளை ஒழிப்பார்கள்.. மத்திய அரசு மீது சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்
சென்னை: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நீக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், 'கேள்வி இல்லதவர்கள் தான் பதிலை ஒழிப்பார்கள்" என கடுமையாக சாடி தனது "எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்றம் ஆண்டுக்கு மூன்று முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர் கால கூட்டத்தொடர் என மூன்று கட்டங்களாக நாடாளுமன்றம் கூட்டத்தொடர் ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாட்டின் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் . அது குறித்த விவாதங்கள் நடைபெறும்.

அதுபோக பல்வேறு மசோதக்களும் நிறைவேற்றப்படும். இது தவிர சில நேரங்களில் அவசிய தேவை கருதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டமும் நடைபெறும். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி சட்டம் அமல்படுத்துவதற்காக ஜூன் 30-ந்தேதி நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடந்தது. அதன்பிறகு சிறப்புக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. நடப்பு ஆண்டில் மழைக்கால கூட்டத்தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது.
மணிப்பூர் விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. இதனால் அவையின் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கடும் அமளிக்கு மத்த்யிலும் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதன் மீதும் வாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றது. கடந்த மாதம் 11 ஆம் தேதி கூட்டத்தொடர் முடிந்த நிலையில் வரும் நவம்பர்- டிசம்பர் மாதத்தில் குளிர் கால கூட்டத்தொடர் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தான், நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. 5 அமர்வுகளாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், கூட்டத்தொடரின் அஜெண்டா குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' விவகாரம் தொடர்பாக மசோதா கொண்டு வரப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையின் சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கேள்வி நேரமின்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புது நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கேள்வி நேரம் இல்லாமல் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது 'எக்ஸ்' தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:- பதில் இல்லாதவர்கள் கேள்விகளை ஒழிப்பார்கள். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடருக்கான அழைப்பு வந்துள்ளது. உறுப்பினர்களின் கேள்வி நேரம் நீக்கப்பட்டுள்ளது. அதானி, மணிப்பூர், சிஏஜி அறிக்கை என எதிர்கட்சிகளின் எந்தக் கேள்விக்கும் பதிலில்லாத ஒரு அரசு வேறென்ன செய்யும்?" என்று பதிவிட்டுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications