Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எச்.ராஜா, எஸ்.வி.சேகர், பத்ரி, ஆர்பிவிஎஸ் மணியன்... நீளும் ‘இந்துத்துவா’வின் மன்னிப்பு பட்டியல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அநாகரீகமாக, இழிவாக, குரூரரமாக பொது அமைதியை சீர்குலைக்கும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின்னர் நீதிமன்றப் படிகளேறி "மன்னிப்பு கேட்கும்' "இந்துத்துவா'வாதிகளின் பட்டியலில் இப்போது விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆர்பிவிஎஸ் மணியன் இணைந்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா, சில ஆண்டுகளுக்கு முன்னர் நீதிமன்றம் குறித்து செய்தியாளர்களிடம் ஆவேசமாக தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையானது. அப்போது எச்.ராஜா மீது வழக்கு பதியப்பட்டாலும் கைது செய்யப்படவில்லை.

 Three Hindutva leaders and seeking apologises in Court

எச்.ராஜா மீது வழக்கு: மேலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் பெஞ்ச் அப்போது எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் எச்.ராஜாவுக்கு நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜரானார்.

எச்.ராஜா மன்னிப்பு: இந்த விசாரணையின் போது, நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் எச்.ராஜா. அத்துடன் நான் பேசியது தவறுதான். கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். நான் பேசியது தவறு என்பதை தாமதமாகத்தான் உணர்ந்தேன் எனவும் நீதிமன்றத்திலேயே தெரிவித்தார். இதனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு தப்பித்தார் எச்.ராஜா

எஸ்.வி.சேகர்: இந்த வரிசையில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும் இணைந்தார்.
பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக ஒரு பதிவை ஷேர் செய்தார். இது தொடர்பாக சென்னை போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கில் எஸ்வி சேகர், நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். ஆனால் மன்னிப்பு கேட்டால் போதுமா? என எதிர்கேள்வி கேட்டு நீதிமன்றம் விடுவதாக இல்லை. நீதிமன்றம், எஸ்வி சேகரை வெளு வெளுவென வெளுத்து வாங்கியது. இந்த வழக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

பத்ரி சேஷாத்ரி: மணிப்பூர் விவகாரத்தில் நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்து பஞ்சாயத்தில் சிக்கியவர் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி. இந்த வழக்கில் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பத்ரி சேஷாத்ரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மன்னிப்பு கேட்டார். இதனால் பத்ரி மீதான வழக்கு முடிவுக்கு வந்தது.

ஆர்பிவிஎஸ் மணியன்: தற்போது அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் பட்டியல் இன மக்களை மிக இழிவாக ஒருமையில் பேசியதால் சர்ச்சையில் சிக்கி சிறைவாசம் அனுபவித்து வருகிறார் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் ஆர்பிவிஎஸ் மணியன். இவரும் தற்போது, மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அரசு தரப்பு, மன்னிப்பு கேட்டாலும் ஜாமீன் கொடுக்கவே கூடாது என வாதிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+