எச்.ராஜா, எஸ்.வி.சேகர், பத்ரி, ஆர்பிவிஎஸ் மணியன்... நீளும் ‘இந்துத்துவா’வின் மன்னிப்பு பட்டியல்!
சென்னை: அநாகரீகமாக, இழிவாக, குரூரரமாக பொது அமைதியை சீர்குலைக்கும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின்னர் நீதிமன்றப் படிகளேறி "மன்னிப்பு கேட்கும்' "இந்துத்துவா'வாதிகளின் பட்டியலில் இப்போது விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆர்பிவிஎஸ் மணியன் இணைந்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா, சில ஆண்டுகளுக்கு முன்னர் நீதிமன்றம் குறித்து செய்தியாளர்களிடம் ஆவேசமாக தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையானது. அப்போது எச்.ராஜா மீது வழக்கு பதியப்பட்டாலும் கைது செய்யப்படவில்லை.

எச்.ராஜா மீது வழக்கு: மேலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் பெஞ்ச் அப்போது எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் எச்.ராஜாவுக்கு நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் நீதிமன்றத்தில் எச்.ராஜா ஆஜரானார்.
எச்.ராஜா மன்னிப்பு: இந்த விசாரணையின் போது, நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் எச்.ராஜா. அத்துடன் நான் பேசியது தவறுதான். கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். நான் பேசியது தவறு என்பதை தாமதமாகத்தான் உணர்ந்தேன் எனவும் நீதிமன்றத்திலேயே தெரிவித்தார். இதனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு தப்பித்தார் எச்.ராஜா
எஸ்.வி.சேகர்: இந்த வரிசையில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகரும் இணைந்தார்.
பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பாக ஒரு பதிவை ஷேர் செய்தார். இது தொடர்பாக சென்னை போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கில் எஸ்வி சேகர், நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். ஆனால் மன்னிப்பு கேட்டால் போதுமா? என எதிர்கேள்வி கேட்டு நீதிமன்றம் விடுவதாக இல்லை. நீதிமன்றம், எஸ்வி சேகரை வெளு வெளுவென வெளுத்து வாங்கியது. இந்த வழக்கு இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
பத்ரி சேஷாத்ரி: மணிப்பூர் விவகாரத்தில் நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்து பஞ்சாயத்தில் சிக்கியவர் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி. இந்த வழக்கில் பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பத்ரி சேஷாத்ரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மன்னிப்பு கேட்டார். இதனால் பத்ரி மீதான வழக்கு முடிவுக்கு வந்தது.
ஆர்பிவிஎஸ் மணியன்: தற்போது அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர் மற்றும் பட்டியல் இன மக்களை மிக இழிவாக ஒருமையில் பேசியதால் சர்ச்சையில் சிக்கி சிறைவாசம் அனுபவித்து வருகிறார் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் ஆர்பிவிஎஸ் மணியன். இவரும் தற்போது, மன்னிப்பு கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அரசு தரப்பு, மன்னிப்பு கேட்டாலும் ஜாமீன் கொடுக்கவே கூடாது என வாதிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications