தேவியை பிடித்தாட்டிய பணத்தாசை.. ஜெயாவை தலைகாணியால் அழுத்தி கொன்ற கொடூரம்.. 3 பேர் கைது
மாநகராட்சி பெண் ஊழியரை கொன்ற பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
சென்னை: விதவை தங்கையை, தலைகாணி வைத்தே அமுக்கி கொலை செய்துவிட்டார் கூடபிறந்த அக்கா! இதையடுத்து அக்கா உட்பட 3 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை, ஜோதி தோட்டத்தைச் சேர்ந்த தம்பதி மூர்த்தி - ஜெயா. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஜெயாவுக்கு வயசு 34. இவர் சென்னை மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார். மாநகராட்சி ஊழியரான இவருடைய தந்தை இறந்ததால், வாரிசு அடிப்படையில் ஜெயாவுக்கு இந்த வேலை கிடைத்தது.
இதனிடையே, 2 வருஷத்துக்கு முன்னாடியே நோய் பாதிக்கப்பட்டு மூர்த்தி இறந்துவிடவே, மகனை தனியாளாக கவனித்து வளர்த்து வந்தார் ஜெயா. இவருக்கு சொந்தமாக 4 வீடுகள் உள்ளதால், அதன் வாடகையும் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கிறது.

தேவி
இவருடைய அக்கா தேவி மாமல்லபுரத்தில் உள்ளார். அவர் கொஞ்சம் பணக்கஷ்டத்தில் உள்ளதால், அவரது வீட்டு வாடகை பணத்தையும் ஜெயாதான் தந்து வருகிறார். இதைதவிர அக்காவுக்கு எந்த உதவி என்றாலும் ஜெயா முன்னின்று செய்வாராம்.

விசாரணை
இந்நிலையில், சம்பவத்தன்று காலை ஜெயா மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டார். ஜெயாவுக்கு ஏற்கனவே வயிற்றில் இருந்த கட்டிக்காக ஆபரேஷன் நடந்துள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட பிரச்சினையால் இறந்துவிட்டதாகவும் தேவி கதறி கதறி சொல்லி கொண்டே அழுதார். சைதாப்பேட்டை போலீசார் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கினர்.

திடுக் தகவல்
போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஜெயாவின் கழுத்து நெறிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் 2 பேர் ஜெயா வீட்டுக்கு வந்து செல்வதும் பதிவாகி இருந்தது. இதையடுத்துதான் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், பல திடுக் திடுக் தகவல்கள் வெளியே வந்தன.

கூலிப்படை
இளம் விதவை ஜெயா, ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். அவரை 2-வதாக கல்யாணமும் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். ஆனால் இது அக்கா தேவிக்கு பிடிக்கவில்லை. கல்யாணம் பண்ணி கொண்டால், செய்து வரும் உதவிகள் நின்றுபோகும் என்று தேவி பயந்தார். அதனால் ஜெயாவின் சொத்துக்காக கூலிப்படையை ஏவி கொலை செய்ய முடிவு செய்தார்.

கைது
அதற்காக ரூ.10 ஆயிரம் கூலி கொடுத்து தன்னுடைய மாமா எத்திராஜ் என்பவரையும், அவருடைய கூட்டாளி சரவணன் என்பவரையும் கொலை செய்ய அனுப்பி வைத்தார் தேவி. அவர்கள் இருவரும் ஜெயாவை தலைகாணியை வைத்து அமுக்கியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர். தேவி, எத்திராஜ், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications