நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்!
சென்னை தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துதான் காணப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சேலம், ஈரோடு, மதுரை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
இதனால் கொளுத்தும் வெயிலில் இருந்து மக்கள் சற்று இளைப்பாறினர். ஆனால் சென்னையில் மட்டும் இதுவரை கோடை மழை தனது கணக்கை தொடங்கவில்லை.

காற்றழுத்த தாழ்வு நிலை
இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெற்கு உள் கர்நாடகத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை நிலப்பரப்பில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை கொட்டும்
இதன் காரணமாக நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை, நாளை மறுநாள்
இதேபோல் திருச்சி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெளியே செல்ல வேண்டாம்
தமிழகத்தில் வடக்கு, மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 11 முதல் மாலை 4 மணி வரை மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அனல் காற்று வீசும்
வெயில் அதிகரிக்கும் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தெற்கு, தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications