நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.. வானிலை மையம் வார்னிங்!
சென்னை தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துதான் காணப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சேலம், ஈரோடு, மதுரை, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
இதனால் கொளுத்தும் வெயிலில் இருந்து மக்கள் சற்று இளைப்பாறினர். ஆனால் சென்னையில் மட்டும் இதுவரை கோடை மழை தனது கணக்கை தொடங்கவில்லை.

காற்றழுத்த தாழ்வு நிலை
இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெற்கு உள் கர்நாடகத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை நிலப்பரப்பில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை கொட்டும்
இதன் காரணமாக நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை, நாளை மறுநாள்
இதேபோல் திருச்சி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளையும் நாளை மறுநாளும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெளியே செல்ல வேண்டாம்
தமிழகத்தில் வடக்கு, மேற்கு மற்றும் உள்மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 11 முதல் மாலை 4 மணி வரை மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அனல் காற்று வீசும்
வெயில் அதிகரிக்கும் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தெற்கு, தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications