சீனா அதிபருக்கு எதிராக போராட்டம்: சென்னையில் 11 திபெத்தியர்கள் கைது
Recommended Video
சென்னை: சீனா அதிபர் ஜின்பிங்குக்கு எதிராக சென்னையில் 2 இடங்களில் போராட்டம் நடத்திய 11 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திபெத் நாட்டை சீனா ஆக்கிரமித்து தமது ஒருபகுதியாக அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திபெத் தலைவராக இருந்த தலாய்லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இந்தியாவில் திபெத் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டு ஏராளமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அதே நேரத்தில் திபெத்தியர்கள் சீனாவிடம் இருந்து சுதந்திரம் கோரி தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
உலகின் எந்த பகுதிக்கு சீனா அதிபர் சென்றாலும் அங்கே போராட்டங்களை திபெத்தியர்கள் நடத்தி வருகின்றனர். தற்போது தமிழகம் வரும் ஜின்பிங்குக்கு எதிராக திபெத்தியர்கள் போராட்டங்களை முன்னெடுக்க முயற்சித்து வருகின்றனர்.

அதனால் திபெத்தியர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் ஜின்பிங் தங்கும் ஐடிசி சோழா கிராண்ட் ஹோட்டல் முன்பாக திபெத் கொடியுடன் வந்த பெண்கள் உட்பட 5 திபெத்தியர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.
#WATCH Chennai: Police detained Tibetan activists who were protesting outside the ITC Grand Chola Hotel where Chinese President Xi Jinping will arrive later today. #TamilNadu pic.twitter.com/fgJkQyX0gs
— ANI (@ANI) October 11, 2019
விமான நிலையம் அருகே..
இதனிடையே சென்னை விமான நிலையம் அருகே ஜின்பிங்குக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் மேலும் 6 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications