தீபாவளிக்கு சொந்த ஊர் போகனுமா.. தமிழக அரசு பஸ்களில் முன்பதிவு தொடக்கம்! ஆன்லைனில் புக்கிங் செய்யலாம்
சென்னை: தீபாவளிக்காக, சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வோருக்காக தமிழக அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையிலிருந்து பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். எனவே அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில், இன்று, டிக்கெட் முன்பதிவு துவங்கியது.

ஆன்லைன் மூலம், டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதேபோல, வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அக்டோபர் 20 முதல் நவம்பர் 30 வரை 392 திருவிழா சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
துர்கா பூஜை, தசரா, தீபாவளி மற்றும் சாட் பூஜை விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு, கொல்கத்தா, பாட்னா, வாரணாசி, லக்னோ போன்ற நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களில், வழக்கமான சிறப்பு ரயில்களில் வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப்படும்.












Click it and Unblock the Notifications