"ஐயா மோடி அவர்களே.. நான் சொல்றேன் கேளுங்க.. முடியலங்க.. மனசு சரியில்லாம போச்சு".. ஜிபி முத்து கதறல்
பிரதமருக்கு ஜிபி முத்து கண்ணீர் வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்
சென்னை: "ஐயா மோடி அவர்களே, நான் சொல்றேன் கேளுங்க.. இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க.. எனக்கு மனநிலை சரியில்லாமல் போயிட்டு இருக்கு.. என்னன்னே தெரியல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒன்னுமே சரியல்லை பார்த்துக்கிடுங்க" என்று டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ஸ்டிரைட்டாக பிரதமருக்கே கோரிக்கை விடுத்து ஒரு கண்ணீர் வீடியோ போட்டுள்ளார்.
Recommended Video
டிக்டாக் சேவை தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.. இதனால் இந்த டிக்டாக்கின் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமானவர்கள் ஏராளமானோர்.. இதில், ஆட்டம், பாட்டம், துக்கம், சந்தோஷம், தற்கொலை முயற்சி வரை சென்று மீண்டு வந்தவர்கள் இன்னும் ஏராளம்!

அதேபோல, டிக்டாக் மட்டும் இல்லையென்றால், இவர்கள் எல்லாம் இவ்வளவு ஃபேமஸ் ஆகியிருப்பார்களா என்றும் தெரியாது.. இவர்களுக்கு வாழ்க்கை தந்ததே இந்த டிக்டாக்தான்... ராத்திரி, பகல் என்று டிக்டாக்கே கதி என்று விழுந்து கொண்டிருந்தவர்கள் இனி என்ன செய்வார்கள்? என்ற அடுத்த கேள்வி எழுந்து வருகிறது..
இதை பற்றி ரவுடி பேபி சூர்யாகருத்து சொல்லும்போது, "நம்ம நாட்டுக்காக தடை பண்ண டிக்டாக்கால் தனக்கு மகிழ்ச்சிதான்" என்று கூறியிருந்தார். அந்த வகையில், எளிய, யதார்த்த பேச்சால் மக்களை ஈர்த்தவர் ஜிபி முத்து. இவரை பொறுத்தவரை, தன்னுடைய மரக்கடை பிசினஸே இவருக்கு 2வதுதான்.. . முதலில் டிக்டாக்.. அந்த டிக்டாக்கும் மரக்கடையில் வைத்துதான் செய்வார்.. சாப்பிடுவது, தூங்குவது என ஒவ்வொரு விஷயத்தையும் டிக்டாக் போட்டு வந்த இவர் தற்போது சோகமே வடிவாக காணப்படுகிறார்.
இப்போது டிக்டாக் தடை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் பிரதமருக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "இந்த பதிவு யாருக்குன்னா, இந்திய நாட்டின் பிரதமர் ஐயா மோடி அவர்களே, நான் சொல்றேன் கேளுங்க.. இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க.. எனக்கு மனநிலை சரியில்லாமல் போயிட்டு இருக்கு..
என்னன்னே தெரியல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்படியாவது இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க.. ஒன்னுமே சரியல்லை பார்த்துக்கிடுங்க.. ஐயா மோடி அவர்களே தாழ்மையா கேட்டுக்கறேன்" என்று சோகத்துடன் புலம்பி உள்ளர் ஜிபி முத்து.
4 நாட்கள் கூட இவர்களால் டிக்டாக் இல்லாமல் இருக்க முடியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.. ஒரு சீன கம்பெனி எந்த அளவுக்கு நம்மை ஆக்கிரமித்து அடிபணிய வைத்துள்ளது என்பது அதைவிட ஆச்சரியமாக உள்ளது.. டிக்டாக் வேண்டும் என்று இப்போதுதான் ஜிபி முத்து பிள்ளையார் சுழி போட்டிருக்கார்.. இனி யாரெல்லாம் வரிசையாக வந்து கோரிக்கை வைக்க போகிறார்களோ, தெரியவில்லை.. பார்ப்போம்!
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications