திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சை கருத்து.. நடிகர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு
சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக நடிகர் சிவகுமார் மீது திருமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி இமெயில் மூலம் ஒருவர் சிவகுமார் பேசிய காணொளியை விஜிலன்ஸ் அதிகாரிக்கு பகிர்ந்திருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகுமார் பேசியிருந்த காணொளி அதில் இடம் பெற்றிருந்தது.
அந்த காணொளியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் திருப்பதி கோயில் நிர்வாகத்தை விமர்சித்து சிவகுமார் பேசியதாக கூறப்படுகிறது.

விஜிலென்ஸ் அதிகாரி
திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் மற்றும் இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் சிவகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விஜிலென்ஸ் அதிகாரி சுப்பிரமணியா என்பவர், திருமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் நடிகர் சிவகுமாருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமலை இரண்டாவது நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தவறான பிரச்சாரம்
இதேபோல, ஜூன், 30ம் தேதிவரை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனம் இல்லை என தவறான பிரச்சாரம் செய்த சில மீடியாக்கள், மற்றும் திருமலை கோவில் இந்து கோயிலாக பின்னர் மாற்றப்பட்டது என்று பிரச்சாரம் செய்த பேஸ்புக் நிர்வாகி உள்ளிட்டோர் மீதும் போலீசில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொடரும் சர்ச்சைகள்
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன் சூர்யா மற்றும் குடும்பத்தினர் பற்றியும் அவர்களின் கடவுள், மதம் சம்பந்தமான நம்பிக்கைகள் குறித்து செய்திகள் பல்வேறு வகைகளில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், தஞ்சை பெரிய கோவில் குறித்து ஒரு கருத்தை நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தெரிவிக்க, அதற்கு இந்து அமைப்புகள் எதிரிப்பு தெரிவித்திருந்தன.

சிவகுமார் விளக்கம்
முன்னதாக கடந்த ஆண்டு, சிவகுமார் வெளியிட்ட ஒரு வீடியோ விளக்கத்தில், தானும், கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்றும், முருக பக்தன் என்றும் விளக்கம் அளித்திருந்தார். இப்போது திருமலையில், சிவகுமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications