மதிமுகவிலிருந்து விலகி மநீமவில் இணைந்த சிவபாலன்... முக்கிய பொறுப்பு கொடுத்த கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளராக சு. சிவபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் வழக்கம்போல சிறப்பான ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கமல் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுகவில் இருந்து விலகி மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ள சிவபாலனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையப் பரப்புரையாளராக திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் மற்றும் காங்கேயம் ஆகிய நான்கு சட்டசபைத் தொகுதிகளின் பார்வையாளராகவும் சு. சிவபாலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகர மதிமுக செயலாளராக இருந்த சிவபாலன், அண்மையில் திடீரென கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

Tirupur Sivabalan who left MDMK and joined MNM

திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர் சு.சிவபாலன். திமுகவை விட்டு வைகோ வெளியேறியபோது, அவரது ஆதரவாளராக வலம் வந்தவர். தொடர்ந்து திருப்பூர் நகரம் மற்றும் மாநகரச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த 27 ஆண்டுகளாக அக்கட்சியில் இணைந்து பல்வேறு பணிகளில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். தற்போது திடீரென அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மதிமுகவில் பல ஆண்டுகாலம் இருந்த சிவபாலன், சட்டசபை தேர்தலில் திருப்பூரில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார் சிவபாலன். அதற்கான வாய்ப்பு கிடைக்காது என்று தெரியவே அதிருப்தியடைந்தார். இதனையடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வைகோ, எம்எல்ஏ, எம்பி ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மதிமுகவினர் மறந்து விடுங்கள் என்று கூறியிருந்தார்.

மதிமுகவில் இருந்து விலகி மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ள சிவபாலனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நீதி மய்யத்தின் தலைமை நிலையப் பரப்புரையாளராக திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் மற்றும் காங்கேயம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் பார்வையாளராகவும் சு. சிவபாலன் அவர்களை நியமனம் செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட சு. சிவபாலன் அவர்களது வருகை நமது கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மக்கள் நீதி மய்யத்தின் அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் வழக்கம்போல சிறப்பான ஒத்துழைப்பை நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+