திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு.. கைதான கொடூரனை ஆஜர்படுத்திய போலீஸ்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னையை அடுத்த ஆரம்பாக்கத்தில் 10- வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொடூரனிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜூ பிஸ்வகர்மா என்ற அந்த நபரை வரும் ஆகஸ்ட் 9 ஆம்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சிறுமியை பின் தொடர்ந்து வந்த கொடூரன் இந்த படு பாதக செயலில் ஈடுபட்டான். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் அதிரவைத்தது. இந்த வழக்கில் குற்றவாளியை பிடிக்க 15 தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். அந்த வாலிபரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர் சூலூர்பேட்டையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. தனது வழங்கப்பட்ட விடுமூறை நாளில், சூலூர்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் ஏறி ஆரம்பாக்கம் வந்துள்ளான். கஞ்சா போதையில் இருந்த கொடூரன், சிறுமியிடம் அத்துமீறியுள்ளான்.
நேற்று கவரப்பேட்டை காவல் நிலையத்தில் விடிய விடிய அவனிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த அவனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். முகத்தை மூடியபடி குற்றவாளியை போலீசார் அழைத்து வந்தனர்.
பூந்தமல்லி மகிளா நீதிமன்ற நீதிபதி முன்பாக வட மாநிலத்தை சேர்ந்த அந்த வாலிபர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவனை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். போலீசார் அவனை காவலில் எடுத்து மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications