12.12 மணிக்குத்தான் தமாகா வேட்பாளர்களை அறிவிப்பேன்! ஜி.கே.வாசன் சொன்னதற்கான காரணம் என்ன?
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் பட்டியலை சரியாக 12.12. மணிக்கு வெளியிட்டது ஏன் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதற்கான காரணத்தையும் வாசனே தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.

இந்த கூட்டணியில் தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் 5 பேரும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதால் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக தமாகா தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் இன்றைய தினம் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.
இன்று காலை 11.57 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த போது ஜி.கே. வாசன் கூறுகையில், "நான் 12.12 மணிக்குத்தான் வேட்பாளர்களை அறிவிப்பேன். அது வரை கேள்விகள் ஏதாவது இருந்தால் கேளுங்கள்" என்றார்.
அதற்கு செய்தியாளர்கள் "ஏன் சார், நல்ல நேரமா" என கேட்டதற்கு வாசன், "உங்களுக்கு ஒரு சென்டிமென்ட் இருக்கிறது போல் எனக்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. 100 சதவீதம் நல்ல நேரம்தான்" என்றார்.
அப்போது ஜி.கே.வாசன் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டதால் தாமரை சின்னத்தில் நிற்கிறோம். அதிமுக கூட்டணி என்றாலும் நாங்கள் நீண்டகாலமாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றார்.
பின்னர் அண்ணாமலை குறித்து கேட்ட கேள்விக்கு தமாகாவை பற்றி என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள், அதற்கு நான் பதிலளிக்கிறேன். பிற கட்சிகள் குறித்த கேள்விக்கு நான் பதிலளிக்க முடியாது என்றார்.
அது போல் சென்னையில் ஏன் போட்டியிடவில்லை என்ற கேள்விக்கு வாசன், "சென்னையை எங்களுக்கு அதிமுக தரவில்லை. சென்னை என்றில்லை, தமிழகத்தில் பல தொகுதிகளை கேட்டும் தரவில்லை. உண்மையை சொல்வதில் தவறில்லை" என்றார்.
இந்த நிலையில் 12.12 மணி ஆனதும் அவர் வேட்பாளர்களை அறிவித்தார். அந்த வகையில் ஒட்டன்சத்திரம்-விடியல் சேகர், ஈரோடு மேற்கு -யுவராஜ், ராணிப்பேட்டை-வி.எம் கார்த்திகேயன், கிள்ளியூர் -நிவின் சைமன், கும்பகோணம் - அசோக் குமார் ஆகிய 5 வேட்பாளர்களை அறிவித்தார்.
12.12 மணிக்கு ஏன் அறிவிப்பு
பொதுவாக தமிழ்நாட்டு அரசியலில் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, வேட்புமனுத் தாக்கல் போன்ற முக்கிய நிகழ்வுகளை "நல்ல நேரம்" பார்த்துச் செய்வது வழக்கம். இன்றைய தினம் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகாலம் இருக்கிறது.
பிறகு மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை சுப ஓரை அல்லது கட்சிக்கு உகந்த லக்ன நேரம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, 12.12 என்பது இரட்டை எண்களின் வரிசையில் அமைவதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஜி.கே. வாசன் எந்த ஒரு முக்கிய அறிவிப்பையும் தனது தந்தையார் ஜி.கே. மூப்பனார் வழியில் ஆன்மீக மற்றும் சாஸ்திர நம்பிக்கையுடன் செய்வது வழக்கம். 12.12 என்ற நேரம் "வெற்றியைக் குறிக்கும்" நேரமாக அவரது ஆஸ்தான ஆலோசகர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications