பிப்ரவரி 25ஆம் தேதி முதல் விருப்ப மனு... தமாகா தலைவர் ஜி.கே. வாசன் அறிவிப்பு
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வரும் ஏப்ரல் மாத கடை கடைசியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாநிலத்திலுள்ள அனைத்து முக்கிய கட்சிகளும் தங்கள் பிரச்சாரங்களை தொடங்கிவிட்டனர்.

மேலும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து முக்கிய கட்சிகள் விருப்ப மனுக்களையும் பெறத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், நடைபெறவிருக்கும் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 ல் தமிழகத்தில் விரைவில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் த.மா.கா சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுவைப் பிப்ரவரி 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை, ஆழ்வார்பேட்டை, த.மா.கா தலைமை அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
பொதுத்தொகுதிகளுக்கு விருப்ப மனு கட்டணமாக ரூ. 5,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கு விருப்ப மனு கட்டணமாக ரூ. 2,500 செலுத்த வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications