இந்த 20 டோல்கேட் பக்கம் போனா... இனி எக்ஸ்ட்ரா காசு எடுத்துட்டு போங்க.
சென்னை; தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பாதி சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கிறது.

இதன்படி தமிழத்தில் 5004 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தனியார் நிறுவனங்கள், தமிழகத்தில் மொத்தம் உள்ள 43 சுங்கச்சாவடிகளில், 20 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளன.
செங்கல்பட்டு அருகே பரனூர், ஸ்ரீபெரும்புதூர், ஆத்தூர், சூரப்பட்டு, பூதக்குடி, சின்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வகைகுளம், மதுரை, திருச்சி, வேலூர், கோயம்புத்தூர் (2), தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை உள்பட 20 சுங்கச்சவாடிகளில் 5 முதல் 15 ரூபாய் வரை ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
ஏற்கனவே பேருந்து டிக்கெட் கட்டண உயர்வு, டீசல் கட்டண உயர்வால் அவதிப்படும் மக்கள், இனி ஒவ்வொரு பயணத்துக்கும் 10 சதவீதம் கூடுதல் கட்டணம் கொடுக்க வேண்டியதிருக்கும். உதாரணமாக சென்னையில் இருந்து மதுரைக்கு 800 ரூபாய் சுங்க கட்டணம் கொடுத்தால் இனி 880 ரூபாய் அளவுக்கு கொடுக்க வேண்டியது வரும். இது லாரி, பேருந்து என பெரு வாகனங்களும் பொருந்தும். இதனால் பேருந்து, லாரி, வாடகை கார் கட்டணங்கள் உயர வாய்ப்பு உள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications