மத்திய அரசு மீது திமுக எம்.எல்.ஏ. புகார்- அவை குறிப்பில் இருந்து அதிரடியாக நீக்கிய சபாநாயகர் அப்பாவு
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் மானியம் ஆகியவற்றை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜ் விமர்சித்து பேசியதை சட்டசபைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. கேள்வி நேரம் இன்றும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்ப, அமைச்சர்கள் அடுத்தடுத்து பதிலளித்தனர். சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பாவதால் சபை நடவடிக்கைகள் அமைதியாக நடைபெற்றன.
கேள்வி நேரத்தின் போது பேசிய எம்.எல்.ஏ. இனிக்கோ இருதயராஜ், மத்திய அரசிடம் இருந்து கூடுதல் மண்ணெண்ணெய் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் மற்றும் விலை உயர்வு குறித்து மத்திய அரசு மீது விமர்சனங்களை முன்வைத்தார் இனிக்கோ இருதயராஜ்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரத்தின் போது கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும். மத்திய அரசு ஏமாற்றிவிட்டது என்பது போன்ற குற்றச்சாட்டுகள் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications