Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை முதல் மீண்டும் அண்ணாமலை யாத்திரை!பியூஷ் கோயல் பங்கேற்பு-அதிமுக உறவு முறிவு ரியாக்‌ஷன் தெரியும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா திமுகவுடனான கூட்டணி முறிவுக்குப் பின்னர் நாளை முதல் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் பாதயாத்திரை செல்கிறார். திருப்பூர் அவினாசியில் தொடங்கும் அண்ணாமலையின் 3-ம் கட்ட யாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை பரப்புவதற்காக அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய பாதயாத்திரை மேற்கு மாவட்டங்களில் நடந்து வந்தது.

TN BJP Chief Annamalai to relaunch Padayatra from tomorrow

அதிமுக கூட்டணி முறிவு: மேற்கு மாவட்டங்களில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்ட போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இதனால் அதிமுக- பாஜக இடையே பெரும் பிரளயம் வெடித்தது. இந்த பஞ்சாயத்தில் டெல்லிக்கு அண்ணாமலை வரவழைக்கப்பட்டார். இதனால் அண்ணாமலையின் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி பறிபோகும் என கூறப்பட்டது.

திடீர் ஒத்திவைப்பு: பின்னர் டெல்லியில் இருந்து தமிழ்நாடு வந்த அண்ணாமலை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு வார கால ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இதனால் அண்ணாமலையின் பாதயாத்திரை கேள்விக்குறியானது. இதனிடையே டெல்லி தலைமை, அதிமுக- பாஜக கூட்டணி பற்றி பேசாமல் 'கடந்து செல்ல' அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இதனால் பாஜக தலைவர்கள் தொடர்ந்து கனத்த மவுனம் காத்து வருகின்றனர்.

TN BJP Chief Annamalai to relaunch Padayatra from tomorrow

3-ம் கட்ட பாதயாத்திரை: தற்போது நாளை முதல் மீண்டும் அண்ணாமலை தமது பாதயாத்திரையை தொடங்குகிறார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 3-வது கட்ட பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை, பல்லடத்தில் அக்டோபர் 19, திருப்பூர் தெற்கு, வடக்கு தொகுதிகளில் அக்டோபர் 20-ல் பயணம் மேற்கொள்கிறார். திருப்பூரில் 3-வது கட்ட பாதயாத்திரை தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்க உள்ளார்.

டெல்லி கண்காணிப்பு?: அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிந்தைய அண்ணாமலையின் பாதயாத்திரையில் பொதுமக்கள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. டெல்லி தலைமையும் இந்த 3-ம் கட்ட யாத்திரையை உன்னிப்பாக கவனிக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டார தகவல்கள். தற்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்பதால் டெல்லியின் கண்காணிப்பில் இந்த யாத்திரை நடத்தப்பாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+