தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை சதமடிக்க இதுதான் காரணம்.. அடித்து சொல்லும் பா.ஜ.க.வின் எல்.முருகன்!
சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயித்து வருகின்றன.
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.

தமிழ்நாடு சதம்
கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை போன்று தமிழ்நாடும் பெட்ரோல் விலையில் சதம் அடித்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ.100.13 என்று 100 ரூபாயை கடந்து விட்டது. கொரோனா காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் விண்ணை முட்டும் பெட்ரோல் விலை மக்கள் மீது இடிபோல் இறங்கியுள்ளது.

வாகன ஓட்டிகள் வேதனை
சம்பாதிக்கும் கொஞ்சம் பணத்தையும் பெட்ரோலே புடுங்கிக் கொள்வதாக வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலை உயரத்தான் செய்யும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க அளித்த வாக்குறுதிகள் எங்கே?
சென்னையில் இது தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன் கூறியதாவது:- தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகள் ஆளுநர் பன்வாரிலால் அறிக்கையில் ஏன் இடம் பெறவில்லை?

இதுதான் காரணம்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலை உயரத்தான் செய்யும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சம்பாதிக்கும் கொஞ்சம் பணத்தையும் பெட்ரோலே புடுங்கிக் கொள்வதாக வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications