எல்லாரும் நோன்பு திறக்க வந்துருங்க! தமிழக பாஜகவின் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அன்போடு அழைக்கும் அண்ணாமலை
சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்படும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
அரபு மாதமான ரமலானில் 29 அல்லது 30 நாட்கள் அதிகாலை முதல் அந்திமாலை வரை உண்ணாமல், பருகாமல் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் ரமலான் பிறை பார்க்கப்பட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்று வருகின்றனர்.

ரமலானும் மத நல்லிணக்கமும்
ரமலான் மாதம் வந்துவிட்டாலே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என்ற மதம் கடந்து பல்வேறு மத நல்லிணக்க நிகழ்வுகள் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் ராம நவமி கலவரம், வீடுகள் இடிப்பு, மசூதிகள் மீது தாக்குதல் போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் அரங்கேறினாலும், அதற்கு இணையாக மத நல்லிணக்க நிகழ்வுகள் நடந்து வருவதை காண முடிகிறது.

இஃப்தார் நிகழ்வுகள்
குறிப்பாக ஒவ்வொரு ரமலான் மாதமும், அரசியல் கட்சிகள் இஃப்தார் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்து அனைத்து மதத்தினரையும் அழைத்து மத நல்லிணக்க கூட்டங்கள் நடத்துவது வழக்கம். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தானும் நோன்பு நோற்று கட்சி சார்பிலும் இஃப்தார் விருந்தை நடத்தினார். நேற்று திமுக சார்பில் சென்னையில் இஃப்தார் விருந்து நடத்தப்பட்டது. அதிமுகவும் இஃப்தார் விருந்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

பாஜகவின் இஃப்தார் நிகழ்வு
இந்த சூழலில் தமிழ்நாடு பாஜகவும் நாளை இஃப்தார் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி சென்னை தியாகராயர் நகர் ஹபீபுல்லா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாலை 4:30 மணியளவில் பாஜகவின் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு பாஜக சிறுபான்மை அணி மாநிலத் தலைவர் ஆசீம்பாஷா, பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், பாஜக மாநில சிறுபான்மை அணி துணைத் தலைவர் எம்.எஸ்.ஷா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்
Recommended Video

ட்விட்டரில் அழைத்த அண்ணாமலை
இந்த விழாவுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்சின் தேசிய துணைத் தலைவர் பாத்திமால் அலி வரவேற்பு நிகழ்த்துகிறார். இந்த இஃப்தார் விழாவில் பாரதி ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், சிறுபான்மை அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ளுமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இதை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அழைத்துள்ளார்.
-
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications