புதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது.. 370 சட்டப்பிரிவு ரத்தால் தமிழக பாஜக படுகுஷி!
Recommended Video
சென்னை: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை தமிழக பாஜக பாட்டு பாடி வரவேற்றுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தானது 1949-ஆம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த போது கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது.
ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உள்துறை அமைச்சர்
இதைத் தொடர்ந்து இன்றைய தினம் மோடியின் வீட்டில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

இந்தியாவுடன் இணைப்பு
அப்போது ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதாக அறிவித்தார். இதனால் ஜம்மு- காஷ்மீர் இந்தியாவுடன் இணைகிறது.

எதிர்ப்பு
மேலும் ஜம்மு-காஷ்மீர் இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதன் மூலம் மாநில அந்தஸ்தையும் இழந்தது. நாடாளுமன்றத்தில் விவாதம் ஏதும் நடத்தப்படாமல் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது.
|
பாட்டு பாடி கொண்டாட்டம்
இந்த நிலையில் மத்திய அரசின் செயலை தமிழக பாஜக பாராட்டியுள்ளது. இதுகுறித்து தன் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் நேருவின் வரலாற்று பிழையை சரி செய்து, காஷ்மீரை மீண்டும் இந்தியாவுடன் இணைத்துள்ளார் மாண்புமிகு @AmitShah
#NehruBlunder
#Article370












Click it and Unblock the Notifications